முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ராம்நாத் கோவிந்த வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத ஒரு சம்பவம் பற்றி கூறினார். ராம்நாத் கோவிந்த் இப்போது ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அது பற்றி சுயசரிதையிலும் எழுதி இருக்கிறார்.
கோவிந்த் சிறுவனாக இருந்தபோது, ஒரு கோடை காலத்தில் அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அவரது தாயார் தமது உயிரை பற்றிக்கூட கவலைப்படாமல், எரிந்து கொண்டிருந்த வீட்டுக்குள் இருந்த பொருட்களை பத்திரப்படுத்த முயன்றார். ஒரு சாதாரண குடும்பத்தை பொறுத்தவரை, குழந்தைகளை வளர்ப்பதற்கு ஒவ்வொரு பொருளும் மிகவும் அவசியமானது.
ஆனால், அந்த முயற்சியில் துரதிஷ்டவசமாக, கோவிந்தின் தாய் தீயில் சிக்கி இறந்துவிட்டார். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்; மிகவும் இளம் வயதில் இத்தகைய துயரத்தை எதிர்கொள்வதும், தாயை இழப்பதும் எவ்வளவு வேதனை மிக்கதாக இருந்திருக்கும்.
என் தாயார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து எனக்கு தொடர்ந்து ஆசி வழங்கினார். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. இருப்பினும், அவர் இல்லாததால் ஏற்பட்ட அந்த வெறுமையை இன்றும் கூட நான் ஆழமாக உணர்கிறேன் என்று பிரதமர் மோடி உருக்கமாக கூறினார்.
Read More : “இது ரீல்ஸ் காலம்.. ஜாக்கிரதையாக இருங்கள்”..! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!



