பாஜகவின் சட்டசபை உறுப்பினரும் பாஜகவின் சட்டசபை கட்சி தலைவருமான நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து விலகியது தனக்கு வருத்தம் தான் என்று தெரிவித்து இருப்பது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அதை தெரிவித்ததாவது எடப்பாடி பழனிச்சாமி தன்னை அதிமுக கட்சிக்கு அழைத்தார், எனக்கு எடப்பாடி பழனிச்சாமி நல்ல நண்பர் என்று கூறி இருக்கிறார்.
ஆகவே நைனார் நாகேந்திரன் மிக விரைவில் அதிமுகவில் இணைவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அதிமுகவில் நயினார் நாகேந்திரன் இணைந்தால் தமிழகத்தில் பாஜகவின் நிலை மேலும் மோசம் அடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்தான் தொடர்ந்து பாஜகவில் இருந்து பல முக்கிய நபர்கள் விலகி திமுக மற்றும் அதிமுக உட்பட திராவிட கட்சிகளில் இணைந்து வருகின்ற நிலையில், தற்சமயம் அந்த கட்சியின் சட்டசபை உறுப்பினராக இருக்கக்கூடிய நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து விலகிய வருத்தமாக இருக்கிறது என்று தெரிவித்து இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அதோடு ஏற்கனவே ஒரு முறை நைனார் மகேந்திரன் திமுகவில் இணைவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதிமுகவில் அவர் மிக விரைவில் இணைவார் என்று சொல்லப்படுகிறது.