ஒரே வீட்டில் வசித்து வந்த தாய், மகள், மருமகள்; அக்கம்பக்கத்தினருக்கு எழுந்த சந்தேகம்.. கதவைத் திறந்த போலீசார் கண்ட அதிர்ச்சி!

open plots at tranquil valley

பலரின் வாழ்க்கையில் எதிர்பாராத சவால்கள் மற்றும் நெருக்கடிகள் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். நீடித்த மனஅழுத்தம், குடும்பத்தில் தொடரும் கருத்து வேறுபாடுகள், பொருளாதார நெருக்கடி, வேலை இழப்பு, தனிமை உணர்வு, உறவுச் சிக்கல்கள் போன்ற பல காரணிகள் சிலரின் மனநிலையை கடுமையாக பாதிக்கக்கூடும். இத்தகைய சூழலில், உரிய ஆதரவும் ஆலோசனையும் கிடைக்காமல் போகும்போது சிலருக்கு தற்கொலை எண்ணங்கள் தோன்றும் அபாயம் அதிகரிக்கிறது.


பல நேரங்களில் மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், கடுமையான கடன் சுமை, குடும்பப் பிரச்சனை, வேலையின்மை மற்றும் தனிமை போன்ற காரணங்களால் தற்கொலை எண்ணங்கள் உருவாகின்றன. ஆனால் இது ஒருபோதும் எதற்கும் இறுதி முடிவாகாது. அந்த வகையில் தற்போது ஆந்திரா மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கூடூர் மண்டலம் அனந்தாயிபேட்டையை சேர்ந்தவர் 60 வயதான ரஜினி என்ற மூதாட்டி. இவருக்கு 40 வயதான கவுரி என்ற மகளும், 35 வயதான மதுபாலா என்ற மருமகளும் உள்ளனர். இந்நிலையில், ரஜினி தனது மகள் மற்றும் மருமகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வெகு நேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராமல் இருந்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து கூடூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பூட்டி இருந்த கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் வசித்து வந்த 3 பேரும் பினாமாக தூக்கில் தொங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கூடூர் போலீசார், அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மசூலிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இவர்களின் மரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களது மரணத்துக்கு குடும்பத்தகராறு தான் காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போலீசார் அவர்களின் உயிரிழப்பு தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: சமூக ஊடகங்களில் வைரலாகும் ‘Burnt Toast Theory’ என்றால் என்ன? Gen Z தலைமுறையின் வாழ்க்கைப் பார்வையை மாற்றும் வைரல் மனநிலை!

Saranya

Next Post

"குடும்பம் வேண்டாம், கள்ளக்காதலன் போதும்"… கள்ளத்தொடர்பால் அனாதையாக நிற்கும் பிஞ்சு குழந்தைகள்..!

Mon Jul 6 , 2026
சமீப காலமாக திருமணத்திற்கு புறம்பான உறவுகள் தொடர்பான குற்றச்சம்பவங்கள் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. இத்தகைய உறவுகள் காரணமாக குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள், வன்முறைச் சம்பவங்கள், உயிரிழப்புகள் போன்ற துயரமான நிகழ்வுகள் அவ்வப்போது பதிவாகி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் நலன் குறித்த கவலையை அதிகரித்துள்ளன. அந்த வகையில், தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேசம் மாநிலம், […]
91dfa8b80c3683f96aa4befd1e98b4ad

You May Like