ஜூலை 5-ம் தேதி மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்று புதிய பாபா வங்கா கணித்துள்ளார்.
தனது கனவுகள் மூலம் எதிர்காலத்தைப் பார்க்க முடியும் என்று கூறும் ஜப்பானிய பெண் ரியோ டாட்சுகி தனது “தி ஃபியூச்சர் ஐ சா” என்ற புத்தகத்தில், பல்வேறு பகீர் கணிப்புகளை செய்துள்ளார். அவரது பல கணிப்புகள் 100% துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இப்போது அதிகமான மக்கள் அவரது கூற்றுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். 1999 ஆம் ஆண்டு “மார்ச் 2011 இல் ஒரு பெரிய பேரழிவு” என்று அவர் கணித்திருந்தார். அவர் கணித்தது போலவே மார்ச் 11, 2011 அன்று டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்பட்டது.. இதனால் அவரின் கணிப்பு உண்மையானது.
ஜூலை 5, 2025 அன்று அவர் என்ன கணித்தார்?
புதிய பாபா வாங்கா, தனது புத்தகத்தில், ஒரு விசித்திரமான மற்றும் பயமுறுத்தும் கணிப்பை வெளியிட்டார். ஜூலை 5, 2025 அன்று ஜப்பானை ஒரு பெரிய பேரழிவு தாக்கும். இருப்பினும், என்ன நடக்கும் என்பதை அவர் சரியாக விளக்கவில்லை, ஆனால் அவரது வார்த்தைகள் இப்போது வைரலாகி வருகின்றனர்.. சமூக வலைதளங்களில் இதுகுறித்து பலரும் விவாதித்து வருவதால் இது பேசு பொருளாக மாறி உள்ளது..
ரியோ டாட்சுகி ஜூலை 5, 2025 அன்று ஒரு பேரழிவு நடக்கும் முன்னறிவித்தார், சிலர் அதை ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் கடலுக்கடியில் ஏற்பட்ட பிளவால் தூண்டப்பட்ட சுனாமி அல்லது பூகம்பமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவரது கடந்தகால கணிப்புகள் இதோ:
இளவரசி டயானாவின் மரணம்
பாடகி ஃப்ரெடி மெர்குரியின் மரணம்
2020 களில் COVID-19 ஐப் போன்ற ஒரு உலகளாவிய நோய்
இந்தத் துல்லியமான கணிப்புகள் காரணமாக, இப்போது பலர் அவர் மீண்டும் சரியாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள், அது சிலருக்கு பீதியை ஏற்படுத்துகிறது.
விமான முன்பதிவுகளில் பெரும் சரிவு:
தட்சுகியின் கணிப்புகளுக்குப் பிறகு, ஜப்பான் விமான முன்பதிவுகளில் 83 சதவீதம் சரிவைக் கண்டதாகக் கூறப்படுகிறது. வரவிருக்கும் பேரழிவு குறித்த அச்சம் காரணமாக கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணங்களை ரத்து செய்தனர். ஹாங்காங்கிலிருந்து சராசரி முன்பதிவுகள் ஆண்டுக்கு ஆண்டு 50 சதவீதம் குறைந்துள்ளன, ஜூன் மாத இறுதிக்கும் ஜூலை மாத தொடக்கத்திற்கும் இடையிலான முன்பதிவுகள் 83 சதவீதம் வரை சரிந்துள்ளன.
ஏப்ரல்-மே வசந்த கால விடுமுறையின் போது ஜப்பானுக்கான முன்பதிவுகளில் 50 சதவீதம் சரிவு ஏற்பட்டதாக ஹாங்காங்கில் உள்ள ஒரு பயண நிறுவனம் தெரிவித்துள்ளது. பல பயணிகள் ஏற்கனவே உள்ள கோடைகால முன்பதிவுகளை ரத்து செய்தனர் அல்லது திகிலூட்டும் கணிப்பு காரணமாக பயணங்களை ஒத்திவைத்தனர்.
ரியோ டாட்சுகியின் கணிப்புகளை புறக்கணிக்குமாறு ஜப்பானிய அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.. அவை முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்றும் கூறினர். “சமூக ஊடகங்களில் அறிவியல் பூர்வமான வதந்திகள் பரவுவது சுற்றுலாவைப் பாதித்தால் அது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். கவலைப்பட எந்த காரணமும் இல்லை, ஏனென்றால் ஜப்பானியர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லவில்லை … மக்கள் வதந்திகளைப் புறக்கணித்து வருகை தருவார்கள் என்று நம்புகிறேன், ”என்று மியாகி மாகாண ஆளுநர் யோஷிஹிரோ முராய் கூறினார்.
Read More : ‘போர் தொடங்கிவிட்டது’ : ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவர் அறிவிப்பு..