̓நாளைக்கு திருமண வரவேற்பு! புதுமண தம்பதிகள் சடலமாக மீட்பு! சத்தீஸ்கரில் அதிர்ச்சி!

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு சற்று முன்பு புதுமணத் தம்பதிகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் உள்ள பிரிஜ்நகர் என்ற இடத்தில் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பாக திக்ரபரா காவல்துறையினர் உனக்கு பதிவு செய்து இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர்களின் பெயர் அஸ்லம் மற்றும் கஹ்காஷா பானு என்று தெரிய வந்திருக்கிறது. இவர்கள் இருவருக்கும் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி ராய்ப்பூரில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று திருமண வரவேற்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். திருமண வரவேற்பில் கலந்து கொள்வதற்காக மணப்பெண்ணும் மணமகனும் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


மணப்பெண்ணும் மணமகனும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்காக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களது அறையில் இருந்து மணப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து மணமகனின் தாயார் அவர்களது அறைக்குச் சென்று குரல் கொடுத்திருக்கிறார். அவர்களிடமிருந்து பதில் ஏதுமில்லை . இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கடந்துள்ளனர் புதுமண தம்பதிகள். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

1newsnationuser5

Next Post

தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட 3 பெண்கள்! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி !

Wed Feb 22 , 2023
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் மூன்று பெண்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தீஸ்வர் கிராமத்தைச் சார்ந்த சகோதரிகளான சங்கீதா மாலி மற்றும் பிரபாய் மாலி ஆகியோர் தங்களது சகோதரருடன் வசித்து வந்திருக்கின்றனர். நேற்று மாலை 5 மணி அளவில் தங்களது வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவரால் தலையில் கல்லை தூக்கி […]
IMG 20230222 WA0144

You May Like