இன்று பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை..! சற்றுமுன் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!

holidays 2025

இன்று மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் இயங்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது இன்று வட தமிழகம் – புதுச்சேரி – தெற்கு ஆந்திர கடலாரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது, வடக்கு – வட மேற்கு திசையில் இன்று நகர்ந்து செல்லக்கூடும்.தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவை காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 27-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை காரணமாக நேற்று காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி,தஞ்சை, விழுப்புரம், சிவகங்கை,செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று காலையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இன்று மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் இயங்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இந்த கோயிலில் விளக்கு ஏற்றி இதை செய்தால் உங்கள் வேண்டுதல் அப்படியே நிறைவேறும்..!! தமிழ்நாட்டில் எங்கிருக்கு தெரியுமா..?

Thu Oct 23 , 2025
திருச்சி மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியான திருப்பட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், பக்தர்களின் தலையெழுத்தை மாற்றும் அற்புதத் தலமாகப் போற்றப்படுகிறது. பழங்காலத்தில் திருப்பிடவூர், திருப்படையூர் என்றும் அழைக்கப்பட்ட இத்தலம், ஒரு தேவார வைப்புத் தலமாகவும் திகழ்கிறது. இக்கோயில் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். வியாழக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் […]
Thiruchy 2025

You May Like