சென்னை நொளம்பூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கணவரை பிரிந்து, தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நிலையில், இரவு நேரங்களில் மட்டும், தனது அம்மாவை துணைக்கு அழைத்து தூங்கி வந்துள்ளார். ஆனால், சம்பவத்தன்று இரு பிள்ளைகளும் தனது அக்கா வீட்டில் இருந்துள்ளனர்.
இதனால், அன்றிரவு அம்மாவின் துணையின்றி, இரவு தனியாக தூங்கியுள்ளார். அப்போது, அந்த பெண் காலை வழக்கம்போல எழும்போது, பக்கத்தில் இளைஞர் ஒருவர் படுத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
ஆனால், அவர் கத்திக் கூச்சலிட்டதால், கத்தியால் முதுகு மற்றும் கைகளில் கிழித்துள்ளார். பின்னர், அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு அந்த பெண் வெளியே ஓடி வந்த நிலையில், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர், சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இச்சம்பவத்திற்கு காரணமான முகேஷ் (26) என்ற இளைஞர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் நொளம்பூர் போலீசார், முகேஷை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் என்பதும், அந்த பெண் வசிக்கும் குடியிருப்பில் தான் இவரும் தங்கியிருப்பதும் தெரியந்தது. நீண்ட நாட்களாக அந்த பெண்ணின் மீது ஆசை கொண்ட முகேஷ், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து குடிபோதையில் அவரிடம் அத்துமீறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் பெறுவது எப்படி..? இதை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க..!!