பாஜக மட்டும் அல்ல.. எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது..!! – EPS அனல் பறக்கும் பேச்சு

9c8e05bdf9a36ecb2bea5ba6ea636ee1 1

31 வருடங்கள் தமிழகத்தில் ஆட்சி புரிந்த, பொன் விழா கண்ட அதிமுகவை பாஜக மட்டும் அல்ல எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஆவேசமான உரையாற்றினார். அந்த உரையில், “அதிமுக முடிந்துவிடும்” என மு.க. ஸ்டாலின் பேசுவது வெறும் பகல் கனவு எனக்கூறி அவர் கடுமையாக தாக்கினர். “நாட்டை காக்க ராணுவம் இருப்பதைப்போல, அதிமுகவை வெற்றிபெறச் செய்ய தொண்டர்கள் சிப்பாய்களாக இருக்கிறார்கள்,” என்றார்.

பாஜக – அதிமுக கூட்டணி வைத்த உடனேயே ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதிமுகவை பாஜக அழித்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் பேசுகின்றன. 31 வருடங்கள் தமிழகத்தில் ஆட்சி புரிந்த, பொன் விழா கண்ட அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்றார். தொடர்ந்து பேசிய அவர், வாக்குகள் சிதறாமல் அதிமுகவுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைக்கப்பட்டது. மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைத்துள்ளோம்.

2021-ல் மக்களை ஏமாற்றுவதற்காக சுமார் 500-க்கும் மேலான அறிவிப்புகளை வெளியிட்டார்கள். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது திமுக. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், சிலிண்டர் மானியம், கல்விக் கடன் என்று எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. திமுக அமைச்சர்கள் மீது உள்ள அனைத்து ஊழல் வழக்குகளும் அதிமுக ஆட்சி அமைந்ததும் விரைந்து விசாரிக்கப்படும். ஒருவரையும் விடமாட்டோம்.

வேண்டும் என்றே பொய் வழக்கு போடுவது, அதிமுகவை அவதூறாக பேசுவதை எல்லாம் நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? வேடிக்கை பார்த்த அந்தக் காலம் எல்லாம் மாறிவிட்டது. அன்று இருந்த பழனிசாமி வேறு, இனி பார்க்க போகிற பழனிசாமி வேறு.” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

Read more: கருட புராணத்தின் படி, பெண்கள் இந்த தவறுகளை ஒரு போதும் செய்யக் கூடாது..!!

Next Post

அதிமுக முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து நீக்கம்...! எடப்பாடி அதிரடி நடவடிக்கை,..!

Mon Jun 30 , 2025
அதிமுகவின் ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் தர்வேஸ், விவசாய பிரிவு செயலாளர் சண்முக பாண்டியன் ஆகியோரை கட்சி பதவிகளில் இருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார். கட்சி பணிகளை சரிவர செய்யாததால் வடசென்னை, கன்னியாகுமரி அதிமுக மாவட்ட செயலாளர்களை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, […]
admk 2025

You May Like