கொடூரமான முறையில் கடன் தொல்லை.! – மைனர் சிறுமியை கற்பழித்த முதியவர்.!

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.


சத்தீஸ்கர் மாநிலம் குருத் கிராமத்தைச் சார்ந்த பெண் ஒருவர் அந்த கிராமத்தில் இருக்கும் 60 வயது முதியவரிடம் ஐயாயிரம் ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறார். குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறித்த நேரத்தில் அவரால் கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனை காரணமாக வைத்து கடனை திரும்ப கேட்க வருவது போல் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த முதியவர் அவரது குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்நிலையில் அந்த குழந்தைக்கு திடீரென உடல் நல குறைபாடு ஏற்படவே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து இருக்கின்றனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து அந்த தாய் காவல் நிலையத்தில் அந்த முதியவரின் மீது புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது போன்ற நபர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

பரோட்டாவிற்கு தமிழகத்தில் மீண்டும் ஒரு இளைஞர் பலி.!குடும்ப விருந்தில் அரங்கேறிய பரிதாபம் !

Mon Jan 30 , 2023
புரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்தில் சென்னையைச் சார்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புரோட்டா என்பது தமிழக மட்டுமல்லாது இந்தியா முழுவதும் எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. சாலையோர கடைகள் முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை சைவ மற்றும் அசைவ பிரியர்களின் விருப்பமான உணவுகளில் புரோட்டா நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். சமீப காலமாகவே தமிழகத்தில் பரோட்டாவினால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன . சில மாதங்களுக்கு […]
IMG 20230130 WA0483

You May Like