‘ஆப்ரேஷன் ADMK..’ அதிமுகவை அழிக்க அஸ்திரத்தை கையில் எடுத்த திமுக.. ஸ்டாலின் போட்ட மாஸ்டர் ப்ளான்..!!

puthiyathalaimurai 2024 03 b36f000c 4144 4c99 8019 2d65ed6ad568 5

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்தனியே போட்டியிட்டு தோல்வியை சந்தித்த பாஜகவும், அதிமுகவும் இப்போது மீண்டும் கைகோர்த்து கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.


இதற்கிடையில், அதிமுகவில் அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைக்காமல் சிரமப்படும் சில முக்கிய தலைவர்கள், எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் திமுக பக்கம் நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவிலிருந்து நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கத்தில், திமுக ‘ஆபரேஷன் அதிமுக’ என்ற பெயரில் ஒரு ரகசியத் திட்டத்தை தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்ட செயலாளர்களிடம் அதிமுக நிர்வாகிகளை தொடர்புகொண்டு, திமுகவிற்கு வரச் செய்வதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, ஓ.பி.எஸ் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாகவே, அதிமுகவிலிருந்து பல முக்கிய தலைவர்கள் திமுகவிற்கு சென்றுள்ளனர். அதில்: செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், வி.பி.கலைராஜன்,
பழனியப்பன் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் அதிமுகவிற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.

தற்போது, அதிமுக நிர்வாகிகளை திமுக பக்கம் இழுக்கும் பொறுப்பு முத்துச்சாமி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மேலும், “முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பும் முன்னரே இந்த நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று திமுக தலைமைத் தலைமையிலான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன.

Read more: NDA கூட்டணியிலிருந்து அடுத்தடுத்து விலகிய OPS, டிடிவி தினகரன்.. விஜயுடன் பேச்சுவார்த்தை..? மொத்தமாக மாறும் அரசியல் களம்..

English Summary

‘Operation ADMK..’ DMK took up arms to destroy AIADMK.. Stalin’s master plan..!!

Next Post

ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களுக்கு உணவளிக்கும் தைரியம் யாருக்கு உள்ளது? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!

Thu Sep 4 , 2025
நாடு முழுவதும் தெரு நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. பொதுமக்களும், குறிப்பாக குழந்தைகளும் தெரு நாய்களின் கடியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் தெரு நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.. ரேபிஸ் நோய் உள்ள ஒரு நாய் கடித்தால், ரேபிஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது ஒரு தீவிரமான நோயாகும்.. இதற்கென பிரத்யேக சிகிச்சை முறை எதுவும் இல்லை என்பதால், […]
dogs new

You May Like