இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடந்த “இந்தோனேசியாவின் டாப் லீக் BRI லிகா கால்பந்து போட்டியில் கலவரம் வெடித்ததில் குறைந்தது 127 பேர் உயிரிழந்தனர். வன்முறை நெரிசலாக மாறியது, ஆயிரம் கணக்கான மக்கள் காயமடைந்தனர். இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் குழந்தைகளும் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் கால்பந்து போட்டி நடந்தது. முதல் போட்டிக்குப் பிறகு கோபமான ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக இந்த மரணங்கள் நிகழ்ந்தன என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் இறந்தவர்களில் இருவர் போலீஸ். “முப்பத்தி நான்கு பேர் மைதானத்திற்குள் இறந்தனர், மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் இறந்தனர்” என்று கிழக்கு ஜாவா காவல்துறைத் தலைவர் நிகோ அஃபின்டா தெரிவித்துள்ளார்.