ஆம்புலன்ஸ் வாகனங்களை தாக்கியது யாராக இருந்தாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த 108 அவசர ஊர்தி ஓட்டுநர் இருளாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், நான் கடந்த 16 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18.08.2025 வேலூர் மாவட்டத்தில் அணைப் பகுதியில் […]
தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை சொத்துப் பதிவு நடைமுறையை மேலும் எளிமையாக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மூலம், இனி சொத்துகளைப் பதிவு செய்ய வாங்குபவர்களும், டெவலப்பர்களும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லத் தேவையில்லை. ‘பிரசன்ஸ்லெஸ்’ (Presenceless) என்று அழைக்கப்படும் இந்த புதிய வசதி, முதற்கட்டமாகப் புதிய சொத்து விற்பனைப் பதிவுகளுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய முறையில், விற்பனையாளர்களும், டெவலப்பர்களும் தேவையான அனைத்து ஆவணங்களையும் […]
வியாழக்கிழமை குரு பகவானின் அருளைப் பெறுவதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில், எந்த ஒரு புதிய கலையையும் கற்றுக்கொள்ளத் தொடங்குவது குருவின் அருளால் சிறப்பாக அமையும். தியானப் பயிற்சி, ஜோதிடம் பார்த்தல் மற்றும் ஆலய தரிசனம் போன்ற ஆன்மீக செயல்கள் தொடங்கவும் இது ஒரு சிறந்த நாள். வாரத்தின் 7 நாட்களில் வியாழக்கிழமை குரு பகவானுக்குரிய நாள். எந்த ஒரு மாதத்திலும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை […]
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இலுப்பூரில் மகரிஷி வித்யாலயா பள்ளிக்கும் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே தாமரைக்குளத்தில் உள்ள தனியார் பள்ளியின் மின்னஞ்சலில் நேற்று காலை 9 மணிக்கு பள்ளியிலும், இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் வீட்டிலும் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மின்னஞ்சல் எஸ்.வி. […]
எந்த ஒரு வழிபாட்டைத் தொடங்கினாலும், முதலில் குலதெய்வத்தை வணங்குவதுதான் நம் மரபில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. அனைத்து தெய்வங்களின் அருளும் நமக்குக் கிடைக்க வேண்டுமானால், குலதெய்வ வழிபாடு அவசியம். ஆனால், சிலருக்கு தங்கள் குலதெய்வம் யார் என்பதே தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கான சில எளிய வழிபாட்டு முறைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். குலதெய்வம் தெரியாதவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் : வீட்டு வாசல் வழிபாடு : முதலில், வீட்டின் தலைவாசலில் மஞ்சள், […]
12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு புதிய மையங்கள் அமைக்கப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; நடப்பு கல்வியாண்டில் (2025- 26) 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய மையங்கள் குறித்த கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி தேர்வு மையங்கள் அமைப்பதற்கான அவசியம் உள்ள […]
தமிழகம், புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி,, வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரிசா மற்றும் அதனை […]
ஒருவரின் பிறந்தநாளாக இருந்தாலும் சரி, திருமணமாக இருந்தாலும் சரி, எந்த வகையான கொண்டாட்டமும் மது இல்லாமல் முழுமையடையாது. தண்ணீர் மற்றும் தேநீருக்குப் பிறகு உலகில் அதிகம் நுகரப்படும் பானங்கள் மதுபானங்கள் என்பதில் சந்தேகமில்லை. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், மதுபானங்களுக்கான பரந்த சந்தையும் உள்ளது, இருப்பினும், சில இந்திய மாநிலங்கள் மதுவை தடை செய்துள்ளன. இந்த மாநிலங்களில்’, மதுபானங்களை உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது மற்றும் […]
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்துவதற்கு தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும் ‘டெட்’ தகுதித் தேர்வை கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து பல்வேறு ஆசிரியர்கள் கூட்டமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, மன்மோகன் […]
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன் தெரிவித்த ரூ.30,000 கோடி குற்றச்சாட்டு குறித்து அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் மதுரை மத்திய & தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி; “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன்பு முதல்வரின் மருமகன் சபரீசனும், துணை […]

