தாய்லாந்து மற்றும் மெக்சிகோவை தளமாகக் கொண்ட மிஸ் யுனிவர்ஸ் என்ற அமைப்பால் வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் சர்வதேச முக்கிய அழகுப் போட்டி “மிஸ் யுனிவர்ஸ்”. 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி இந்த வருடம் நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இந்திய போட்டியில் இந்தியா சார்பில் பட்டியிடும் போட்டியாளரை தேர்ந்தெடுக்க “மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா 2025” என்ற போட்டி நேற்றைய தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் […]

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. […]

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிறைவு செய்ய கோரி எடப்பாடி பழனிசாமி சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது . வழக்கில், சூரியமூர்த்தி தரப்பு, கட்சி விதிகளின் அடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்வு நேர்மையாக நடைபெறவில்லை என வாதிட்டது. அதே நேரத்தில், எடப்பாடி தரப்பில், சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் அல்லாததால் அவரால் இத்தகைய கேள்வி […]

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி இன்று காலமானார்.. இவருக்கு வயது 80. நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் […]

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு எம்.ஜி.ஆர் சிலை அருகே நேற்றிரவு எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.. அப்போது அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட அவர், திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.. அப்போது மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் சென்றதால் எடப்பாடி பழனிசாமி கோபம் அடைந்தார்.. அப்போது பேசிய அவர் “ நோயாளியே இல்லை என்றும் என்னுடைய ஒவ்வொரு கூட்டத்திலும் இதேபோல ஆளே இல்லாமல் ஆம்புலன்ஸை அனுப்பி […]