நேற்று மத்திய போலந்தின் ராடோமில் நடந்த ஒரு விமான கண்காட்சிக்கான ஒத்திகையின் போது போலந்து விமானப்படையின் F-16 போர் விமானம் விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, வார இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த ராடோம் விமான கண்காட்சி ரத்து செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் விமானம் ஓடுபாதையில் விழுந்து சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஆடம் […]

அதிமுக கட்சி விதிகள் திருத்தத்திற்கு எதிராக கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் வழக்குத் தொடர அனுமதி வழங்கி தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்வதை எதிர்த்தும், உட்கட்சி தேர்தலை எதிர்த்தும் அதிமுக தொண்டர்கள் சார்பில் வழக்கு தொடர கே.சி பழனிசாமி மகன் சுரேன் பழனிசாமி, வழக்கறிஞர் ராம் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.. அதில் “ அதிமுக […]

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கரேலி என்னும் பகுதியில் வசித்து வந்த 17 வயதான பியூஸ், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. தனது தந்தையை இழந்த பியூஸ், தனது தாய் காமினியுடன் வாழ்ந்து வந்தார். வழக்கமான நேரத்தில் பள்ளிக்கு செல்லும் பியூஸ், அன்று காலை 8.30 மணிக்கு பள்ளியில் இல்லாததால், பள்ளி நிர்வாகத்தினர் தாய்க்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அவர் போலீசில் புகாரளித்தார். […]

சென்னை நீலாங்கரையில் திமுக எம்.பி என்.ஆர். இளங்கோ இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.. திருமணத்தை நடத்தி மணக்களை வாழ்த்திய அவர் இந்த விழாவில் சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ அவர்களின் இல்லத்திருமன விழாவை தலைமையேற்று நடத்தி மணமக்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. கலைஞர் மீது, என் மீது, கழகத்தின் மீது பற்றுக்கொண்டு என்.ஆர். இளங்கோவன் தொடர்ந்து கழக்கத்திற்காக பணியாற்றிக் கொண்டிருப்பவர்.. […]

கால்களில் ஏற்படும் சில மாற்றங்கள், உங்கள் இதயத்தின் செயல்திறனை பாதிக்கக் கூடிய அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பெரும்பாலானவர்கள் இதயநோய் என்றாலே மார்பு வலி, சுவாசக் குறைபாடு போன்ற அறிகுறிகளை மட்டுமே நினைப்பார்கள். ஆனால் உண்மையில், இதயச் சுகாதாரம் குறைவடைந்தால், அதன் தாக்கம் கால்களிலும் தெரியும். கால்விரல்களில் கட்டிகள் : உங்கள் கால்விரல்கள் அல்லது கை விரல்களில் தோன்றும் சிறிய, வலி தரும் மென்மையான கட்டிகள் ‘ஒஸ்லர் […]

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.. சிதம்பரத்தில் இருந்து வேளங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த இரு சக்கரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.. மேலும் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தது.. அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பைக்கில் சென்ற சங்கர் என்பவர், துப்புரவு பணியில் […]

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு பேராசிரியை நிகிதா சென்றுள்ளார். அப்போது, தனது நகைகள் திருடு போனதாக காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், அந்த கோயிலில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், அவரை தனிப்படை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை காவலர்கள் மிகக் கொடூரமாக தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கை […]

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் வருகின்றன.. மத்திய, மாநில அரசுகள் பெண்களின் பாதுகாப்புக்காக பல முயற்சிகளை மேற்கொண்டாலும் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.. சிறுமிகள் முதல் மூதாட்டி வரை அனைத்து வயது தரப்பு பெண்களுக்கும் ஒரு வித பயத்துடனே வெளியே சென்று வர முடிகிறது.. இந்த நிலையில், இந்திய நகரங்கள் பெண்களுக்கு உண்மையில் எவ்வளவு […]