வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் புதுப்பிப்பு செய்யப்படும் வகையில் புதிய ‘ECINET’செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்யவுள்ளது. இத்தகவல்கள் வழங்க இந்த அமைப்பு உதவுவதோடு, இவ்வாண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இது அமலுக்கு வர உள்ளது. முன்னர் பயன்படுத்தப்பட்ட கைமுறை அறிக்கையிடல் முறைகளுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய செயல்முறை நேர தாமதத்தை […]
பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் திருமணச் சான்றிதழலை இணைப்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் திருமணச் சான்றிதழ் அவசியம் என முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, திருமணச் சான்றிதழுக்கு பதிலாக ‘இணைப்பு J” என்ற எளிமையான பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரரின் பெயர், இருப்பிடம், வாழ்க்கை துணையின் பெயர் ஆகிய விவரங்கள் […]
அண்ணா பல்கலைக்கழக ஞானசேகரன் பற்றி பேசினால் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஏன் இத்தனை பதட்டமைடைகிறார் என்று தெரியவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அனைவரும் அறிந்ததே. சம்பவம் நடந்த மறுநாள் கோட்டூர்புரம் போலீஸார் ஞானசேகரனைக் கைது செய்கிறார்கள். பின்னர் அன்று மாலை விடுவிக்கிறார்கள். அதன்பிறகு, டிசம்பர் 25-ம் தேதி ஞானசேகரனை […]
வளர்ச்சியை நோக்கி வேகமாக நகரும் நாடு, இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் நான்காவது பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி நாடாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆயோக் இந்தியா தற்போது உலகின் நான்காவது பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி நாடாக மாறியுள்ளது என்று கூறியிருந்தாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா 4 டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட நாடாக மாறும் என்று IMF நம்புகிறது. இந்தியா எப்படி வளர்ச்சி […]
இளைஞர் நீதிக் குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் விதிமுறைகளின்படி தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக் குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதிக் குழுமத்திற்கு ஒரு […]
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதி முடிகிறது. இதையடுத்து, புதிய எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாள் மாலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதில், திமுக 4 மற்றும் அதிமுக இரண்டு இடங்களை இந்த தேர்தலில் பெறும். தமிழ்நாட்டில் பாமகவின் அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரதேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகியோர் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ளனர். […]
தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தவறான தகவல் பரவி வருகிறது. தனியார் பேருந்து உரிமையாளர்கள், பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதுகுறித்து மக்கள் கருத்து கேட்டு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த […]
தெற்காசியாவில் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் மக்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் கடுமையான வெப்ப அபாயங்களை எதிர்கொள்வார்கள் என்று உலக வங்கி அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. “ஆபத்திலிருந்து மீள்தன்மை வரை: தெற்காசியாவில் மக்கள் மற்றும் நிறுவனங்கள் தகவமைப்புக்கு உதவுதல்” என்ற தலைப்பிலான அறிக்கையின்படி, வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களில் தெற்காசியா மிகவும் காலநிலை பாதிப்புக்குள்ளான பகுதியாகும். 2030 ஆம் ஆண்டு வாக்கில், தெற்காசிய மக்கள் தொகையில் சுமார் 89% […]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும், விடுப்பட்டவர்களை இணைக்கும் நோக்கில் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 1.14 கோடி பேர் பயனடைந்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க உள்ளது. தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் […]
தமிழக பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து, மாநில அரசுக்கு மாற்றம் செய்து, சட்டத்தில் திருத்தம் செய்து, 10 சட்ட மசோதாக்கள், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசாங்கம் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு […]