மயிலாடுதுறை மாவட்டம் பனையக்குடி கிராமத்தில் நிலத் தகராறு காரணமாக அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பொன்னையன், 14 வயது சிறுமியை தாக்கி மானபங்கப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பனையக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது குடும்பத்தினர், கடந்த நான்கு தலைமுறைகளாக 50 சென்ட் கோயில் நிலத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த […]
அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே நிலவி வந்த பனிப்போர், தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், “அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேசுவேன்” என செங்கோட்டையன் கூறியிருந்தார். அதன்படி, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பணியை அடுத்த 10 […]
கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 12-ம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல்- விலங்கியல் பாடங்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில்: கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர்- கிரேடு 2 (Livestock Inspector) நேரடி நியமனமும் பதவி உயர்வும் […]
கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவனபுராவில், கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்த லீலாவதி என்ற பெண், தனது கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக கணவனை கைவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11 வருடங்களுக்கு முன், மஞ்சுநாத் – லீலாவதி தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மஞ்சுநாத் வாடகை கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இதனால் அடிக்கடி இரவில் வேலைக்குச் […]
2025 ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் சீனாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் பைனலில் நடப்பு சாம்பியனான தென்கொரியாவை எதிர்கொள்கிறது. ஹாக்கி ஆசிய கோப்பை 2025 தொடரின் கடைசி சூப்பர் ஃபோர்ஸ் சுற்று போட்டி நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. ராஜ்கிர் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மென் இன் ப்ளூ அணி 7-0 என்ற கணக்கில் சீன அணியை வீழ்த்தி, இந்தியா இறுதிப்போட்டிக்கு […]
டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இடைநிலை ஆசிரியர்களும், பி.எட். முடித்த பட்டதாரி ஆசிரியர்களும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் டெட் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறையின்படி, ஆண்டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கடைசியாக, கடந்த 2022-ம் ஆண்டுக்கான […]
இன்றைய வாழ்க்கை முறையில் பெரும்பாலானோரை அச்சுறுத்தும் ஒரு நோய் என்றால் அது நீரிழிவு நோய் தான். உலகெங்கிலும் லட்சக்கணக்கானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை இந்தியாவில் மட்டும் 10.1 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நோய் பெரியவர்களை மட்டுமல்ல, இளைஞர்களையும் அதிகம் பாதிக்கிறது. நீரிழிவு என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் ஒரு நோய். […]
சந்திர கிரகணம் என்பது ஒவ்வொரு ஆண்டும் பல முறை நிகழும் மிகவும் கவர்ச்சிகரமான வான நிகழ்வுகளில் ஒன்றாகும். வானியல் பார்வையில், சர்வதேச வானியல் ஒன்றியம் நமது சூரிய மண்டலத்தில் எட்டு முக்கிய கிரகங்களை அங்கீகரிக்கிறது – புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும். அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த கிரகங்கள் ஒவ்வொன்றும் இயற்கையான துணைக்கோள்களைக் கொண்டுள்ளன, மேலும் பூமியின் துணைக்கோள் சந்திரன் […]
தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நாளை முதல் 10-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் […]
தீபாவளிப் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜோதிடத்தின் படி, குரு பகவானின் பெயர்ச்சி ஒரு முக்கியமான நிகழ்வாகும். “குரு பார்த்தால் கோடி நன்மை” என்பது பழமொழி. வரும் அக்டோபர் 18-ஆம் தேதி, குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். இந்த மாற்றம் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் தரவல்லது என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். குரு […]

