சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூதாட்டி ஒருவர் பலி என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று நோயை மக்கள் மறந்திருந்த நிலையில், ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிலும் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் இந்தியாவில் 363 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கான நகல் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். […]
வீடுகளில் கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகளின் தொல்லை என்பது பலருக்கும் ஒரு பெரிய பிரச்சனையாகும். இவை உணவுப் பொருட்களையும், சமையலறையையும் அசுத்தப்படுத்துவதோடு, சுகாதாரக் கேடுகளையும் விளைவிக்கின்றன. சந்தையில் கிடைக்கும் ரசாயன பூச்சிக்கொல்லிகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை. ஆனால், இப்போது நாம் பார்க்கப்போகும் எளிய தீர்வு, உங்கள் கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இதற்குத் தேவைப்படுவது பச்சை மிளகாயின் காம்புகள் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் மட்டுமே. முதலில், பச்சை மிளகாயின் காம்புகளை […]
இந்த நவீன உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். சில பெற்றோர்கள் தக்கள் பிள்ளைகள் மிகச் சிறிய வயதிலேயே ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதாகவும், ஸ்மார்ட் போன்கள் மூலம் அதிக தகவல்களை அவர்கள் தெரிந்துக்கொள்வதாகவும் நினைக்கின்றனர். இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள் செல்போன் பார்ப்பது சுமார் 52 சதவீதம் வரை உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த […]
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 9 தீவிரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர் நடந்தன. இதையடுத்து பதற்றம் அதிகரித்ததால் இருநாடுகளிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தியாவின் 6 போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் […]
வியர்வை பொதுவானது. கோடைக்காலங்களில் உடலில் வரும் வியர்வை உடல் வெப்பநிலையை குளிர்ச்சியாக்க செய்கிறது என்பதை அறிவோம். ஆனால் அதீத வியர்வை என்பது ஹைப்பர் அஹிட்ரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது அக்குள் மட்டும் அல்லாமல் உடல் முழுவதும் வியர்வையை உண்டு செய்யும். அக்குள் வியர்வை என்பது அதிக அசெளகரியத்தை உண்டு செய்யலாம். அது தவிர்க்க வேண்டியதில்லை என்றாலும் அதனுடன் வெளிவரும் துர்நாற்றம் மோசமானதாக இருக்கும் நிலையில் அக்குள் வியர்வை தவிர்ப்பதே நல்லது. […]
டீ குடிக்கும்போது வெறுமனே டீயை மட்டும் குடிக்காமல் அதோடு கூடவே இரண்டு பிஸ்கட் அல்லது ரஸ்க் முக்கி சாப்பிட்டால் டீ, ரஸ்க் ரெண்டுமே கொஞ்சம் சுவை கூடுதலாக இருப்பது போல தோன்றும். ஆனால் இந்த பழக்கம் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு மற்றும் பிற உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நம்மில் பலருக்கும் டீ குடிக்கும்போது அதோடு கூடவே ஏதாவது ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட்டே ஆக வேண்டும். […]
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு உட்பட எந்த வழக்குகளிலும் அரசியல் தலையீடு இல்லை என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அனைவரும் அறிந்ததே. சம்பவம் நடந்த மறுநாள் கோட்டூர்புரம் போலீஸார் ஞானசேகரனைக் கைது செய்கிறார்கள். பின்னர் அன்று மாலை விடுவிக்கிறார்கள். அதன்பிறகு, டிசம்பர் 25-ம் தேதி ஞானசேகரனை போலீஸார் மீண்டும் கைது […]
உலகளவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வெள்ளை அரிசியை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜப்பானியர்கள் வெள்ளை அரிசியை தங்கள் உணவின் மிக முக்கிய பகுதியாக உட்கொண்டு வருகின்றனர். வெள்ளை அரிசியை அதிகளவு பாலிஷ் செய்வதால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இழக்கப்படுகிறது. வெள்ளை அரிசியில் அதன் தவிடு மற்றும் கிருமி நீக்கப்பட்டு எண்டோஸ்பெர்ம் மட்டும் காணப்படுகிறது. இது சுவையை மேம்படுத்தவும், ஆயுளை நீட்டுக்கவும், சமையல் பண்புகளை மேம்படுத்தவும் உதவுகிறது. […]
கணவர் இறந்துவிட்டாலும், ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் உரிமையாக பாதுகாப்பான தங்குமிடத்தை அங்கீகரிக்கும் வகையில், மனைவியை அவரது திருமண வீட்டிலேயே வசிக்க அனுமதியளித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு கணவர் இறந்த பிறகும், அந்தப் பெண்ணும் அவரது குழந்தையும் கணவரின் வீட்டிலேயே வசித்து வந்தனர். இருப்பினும், அவரது கணவரின் தாயார் மற்றும் உடன்பிறந்தவர்கள் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தத் தொடங்கியதால், அவர் பாதுகாப்பு கோரி பாலக்காடு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை […]