இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் (ஆகஸ்ட் 7) அமல்படுத்தப்படவுள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள தாக்கம் குறித்து பெரும் கவலைகளை எழுப்பியது. இருப்பினும், தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. PHD வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (PHDCCI) நடத்திய ஆய்வின்படி, இந்த வரி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.19% […]

கரூர் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் பொன் அழகிரி உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். கரூர் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் பொன் அழகிரி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி தமிழ் செல்வன் உள்ளிட்ட 50 பேர் திமுகவில் இணைந்தனர். நேற்று இரவு, ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் இந்த இணைப்பு நடைபெற்றது. கரூரில் […]

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பதட்டங்கள் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள 25% வரிக்கு மேல் கூடுதலாக 25% வரியை அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை இறக்குமதி வரியை 50% ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்திய சந்தையில் நுழையும் அமெரிக்க பொருட்களின் விலைகளில் கூர்மையான அதிகரிப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் இறக்குமதிகள்: COMTRADE தரவுத்தளத்தின்படி, […]

இம்மாதத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் தொடர்ச்சியாக விடுமுறை. இம்மாதத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறையாகும். அதேபோல், அதற்கு அடுத்து ஆகஸ்ட் 16 சனிக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 17 ஞாயிற்றுக்கிழமை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. இதனால், சொந்த ஊருக்கு செல்ல […]

கோயில் பணியாளர்களுக்கு இருசக்கர வாகன கடன் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவையில் அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு, 210 அறிவிப்புகளை வெளியிட்டார். கிராமக் கோயில் பூசாரிகள், ஆதிதிராவிடர் கோயில் அர்ச்சகர்கள் 10 ஆயிரம் பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் […]

நம்மில் பலருக்கு ஒவ்வொரு வகையான படங்களை பிடிக்கும். ஒரு சிலருக்கு காதல்-காமெடி படங்கள் பிடிக்கும். ஒரு சிலருக்கு த்ரில்லர்-ஆக்ஷன் படங்கள் பிடிக்கும். ஸ்பெஷலான சிலருக்கு பேய்-த்ரில்லர் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். பேய் பட பிரியர்கள் பலர், மயிர்கூச்சரிய செய்ய வைக்கும் அளவிற்கு பயத்தை கொடுக்கும் படங்களை தனியாக பார்க்க வேண்டும் என்று விரும்புவர். ஒரு திரைப்படம் என்பது விருவிருப்பாகவும், ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்க வேண்டும். படங்கள் பார்க்க […]

சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலர்களுக்கு, இரவு பணியிலிருந்து விலக்கு அளித்து, காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க சென்னை காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் முக்கிய சாலைகள் மற்றும் சாலை […]

வார இறுதிநாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வார இறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்கேற்ப சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாக்குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை 340 பேருந்துகள் […]

கானாவில் (Ghana) ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளானதில் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் 2 அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து நேற்று (06) காலை 9.12 மணியளவில் அந்நாட்டின் அஷாந்தி மாகாணத்தில் உள்ள ஒபுவாசி நகரத்துக்கு இராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது. இதையடுத்து, புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. […]