மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும் உணவாக கருதப்படுகிறது. இதனால்தான், பலர் வாரம் ஒருமுறை மீன் வாங்கி சமைத்து சாப்பிடுகின்றனர். இருப்பினும், சிலருக்கு மீனின் முள் தொண்டையில் சிக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அந்த உணவைத் தவிர்க்கின்றனர். உண்மையில், சற்று கவனக்குறைவாக மீனை சாப்பிடும்போது, அதன் நுண்மையான எலும்புகள் தொண்டையில் சிக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இது, தற்காலிக வலி, விழுங்குவதில் சிரமம் போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும். அப்படி ஒரு […]

சனி அமாவாசை நாளை (ஆகஸ்ட் 23) வருகிறது. அமாவாசை திதி ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை காலை 11:55 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 23 சனிக்கிழமை காலை 11:35 மணிக்கு முடிவடையும். அமாவாசை மிகவும் செல்வாக்கு மிக்கதாகக் கருதப்படுகிறது, இந்த நாளில் சில வேலைகளைச் செய்வது சனி பகவானைப் பிரியப்படுத்தும், மறுபுறம், இந்த நாளில் தவறுதலாக கூட எந்தத் தவறும் செய்யக்கூடாது. சனி தோஷம், சதேசாதி மற்றும் தாயாவிலிருந்து விடுபட இந்த […]

சமையல் என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், மேலும் உணவு தயாரிப்பைப் பொறுத்தவரை, நாம் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் உபகரணங்கள் நம் தட்டில் உள்ள பொருட்களைப் போலவே முக்கியமானவை. இருப்பினும், அனைத்து சமையலறைப் பொருட்களும், குறிப்பாக நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த பாதுகாப்பானவை அல்ல. நிபுணர்களின் கூற்றுப்படி, சில பாத்திரங்கள் வெப்பத்தில் வைக்கப்படும்போது அல்லது காலப்போக்கில், அவை தயாரிக்கப்படும் பொருளைப் பொறுத்து தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை வெளியிடக்கூடும். இந்த இரசாயனங்கள் உட்கொள்ளும்போது […]

அரசுப் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாக ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாதம்தோறும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

சேலம் அருகே இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தந்தையையும், இரண்டாவது மனைவியுமான சித்தியையும் தலையை துண்டித்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் இடங்கணச்சாலை கோனேரிப்பட்டி பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (47), கூலித் தொழிலாளி. இவரது முதல் மனைவி ஜெயந்தி, சில ஆண்டுகளாக அவரை விட்டு பிரிந்து, சேலத்தில் தனியாக வசித்து வருகிறார். அவர்களுக்கு ஆகாஷ் (23) என்ற […]

கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே வேற யாராலும் பக்கத்துல கூட வர முடியாது என தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில், தே.மு.தி.க-வை நிறுவிய மறைந்த நடிகரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தைக் குறிப்பிட்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், “நான் மதுரை மண்ணில் கால் எடுத்து வைத்ததும் ஒரே ஒருத்தரை பற்றிதான் […]

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், TikTok வீடியோக்கள் அல்லது YouTube Shorts-களை தொடர்ந்து ஸ்க்ரோல் செய்வது நேரத்தை கழிப்பதற்கான வழியாக தோன்றலாம். ஆனால் மூளையில் ஏற்படும் விளைவுகள் நாம் நினைப்பதை விட மிகவும் ஆபத்தானதாகவும் கவலையளிப்பதாகவும் இருக்கும் என்று நரம்பியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பல ஆய்வுகள் தெரிவிப்பதாவது, குறுகிய வடிவிலான வீடியோக்கள் (short-form videos) மது போன்ற போதைப் பொருட்களைப் போலவே “reward pathways”-ஐ மூளையில் தூண்டுகின்றன. நீண்டகாலத்தில் இது உந்துதல் (motivation), […]

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ் மொழியின் இலக்கிய திறன் மேம்படுவதற்காக தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்காக ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறிதல்’ தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வின் மூலம், மாணவர்களின் இலக்கியப் பார்வை, வாசிப்பு நுண்ணறிவு, மொழிப்பண்பு ஆகியவை மேம்படும் வகையில் வினாக்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, பத்தாம் […]

ஒருவர் பிறந்த தேதியின் அடிப்படையில் அவர்களது ஆளுமை, மனநிலை, தொழில்நடத்தல் என பலவற்றையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா..? அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். ரேடிக்ஸ் எண் : ஒருவரின் பிறந்த நாளை வைத்து இந்த ரேடிக்ஸ் எண்ணை கணக்கிட வேண்டும். உதாரணத்திற்கு, உங்கள் பிறந்த தேதி 22 என்றால் உங்களின் ரேடிக்ஸ் எண் 4 ஆகும். பிறந்த தேதி இரட்டை எண்ணில் இருந்தால் அதை […]

சென்னை மாநகரப் பகுதிகளில் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வருகின்றன. செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு அச்சமூட்டும் […]