சிறுநீரக கற்கள் ஏற்படுவது என்பது தனிமனிதரின் இயல்பான வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் ஒரு சுகாதார சிக்கலாகும். சிறுநீரில் கற்கள் உருவாவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், உணவுப் பழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. போதிய அளவில் தண்ணீர் அருந்துவது, உடலில் சுரக்கும் கழிவுகளைச் சீராக வெளியேற்றும் முக்கிய வழியாக இருக்கும். ஆனால், இத்துடன் சில உணவுகளை தவிர்த்தும், சிலவற்றை நியமித்து உபயோகித்தும் சிறுநீரகங்களை பாதுகாக்க முடியும். உணவுகளில் சேர்க்க வேண்டியவை : […]

மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த மாநாட்டிற்கு வந்த விஜய்யை காண, லட்சக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் கூடியிருந்தனர். இந்த மாநாட்டிற்கு மொத்தம் 2500 ஆண் பவுன்சர்களும், 500 பெண் பவுன்சர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேடையில் யாரும் ஏறிவிடக் கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், சில ரசிகர்கள் ஆர்வத்தால் கட்டுப்பாடுகளை மீறினர். […]

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், தமிழ்நாடு அரசு புதிய நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கும் பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த நிதி உதவிக்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 31, 2025 என அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், குடும்பத் […]

தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களின் ஒரு பகுதியாக, தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியின் கீழ், “ஆவின் பாலகம் மானிய திட்டம்” பலருக்கு வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பாகவே அமைகிறது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், குறைந்த வருமானம் கொண்ட சமூகத்தினருக்கு தனி தொழிலை ஆரம்பிக்க அரசு […]

கூல்ஸ்கல்ப்டிங் எனப்படும் எந்திரத்தைப் பயன்படுத்தி கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சைகள் தொடர்பாக தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக விஎல்சிசி நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ 3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டிருந்த உடல் எடைக் குறைப்பு விளம்பரம் புகார் மற்றும் விளம்பர கண்காணிப்பு மூலம் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வந்தது. பரிசோதனையில், இந்நிறுவனம் , எடை இழப்பு பற்றிய மிகைப்படுத்தப்பட்ட அறிவிப்புகளை […]