அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடந்த “அமைதியை நோக்கி” எனும் தலைப்பில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேரடியாக சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையிலான உறவைப் பொருத்தவரை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், உக்ரைன் போர் தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என தெரிகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து […]

பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” எனப்படும் நிலஅதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள நாடு ஜப்பான். இந்த பகுதியில் பசிபிக் தட்டம், பிலிப்பைன் கடல் தட்டம், யூரேஷிய தட்டம் மற்றும் வட அமெரிக்க தட்டம் உள்ளிட்ட பல புவிச்சரிவு தட்டுகள் சந்திக்கின்றன. இந்த புவிச்சரிவு தட்டுகள் தொடர்ந்து நகர்வதும், ஒன்றோடு ஒன்றும் மோதுவதால், ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது இயற்கையின் ஒரு வழக்கமான செயல்பாடாக இருந்தாலும், ஜப்பானில் வாழும் மக்களுக்கு […]

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சருமான பதவி வகித்து வருபவர் ஐ.பெரியசாமி. இவரின், திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் உள்ள வீடு மற்றும் சென்னையில் உள்ள வீடு, எம்எல்ஏ குடியிருப்பில் அவரது மகனின் அறை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 11 மணி நேரம் வரை நீடித்தது. அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் திமுகவில் மாவட்ட செயலாளராகவும், பழனி எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார். […]

அம்மன் வழிபாட்டிற்கே உரிய மாதமான ஆடி மாதம் முடிந்துவிட்டது. முழுமுதற் கடவுளாகிய விநாயகரையும், காக்கும் கடவுளான திருமாலையும், உலகிற்கே தந்தையாக விளங்கும் சிவனையும், வழிபடுவதற்கான ஆவணி மாதம் இன்று தொடங்கியுள்ளது. ஆவணி மாதம் தான் விநாயகரும், கிருஷ்ணரும் அவதரித்த மாதம் ஆகும். சூரியன் சிம்ம ராசியில் நிலைபெற்று வலிமை பெறும் இந்த காலக்கட்டத்தில், தொடங்கப்படும் எந்த காரியமும் சிறப்பாக முடியும் என்ற நம்பிக்கை. இதுவே, ஆவணிக்கு “சிங்க மாதம்” என்ற […]

உரிய விதிகளுக்கு உட்பட்டு கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் தவணைகளில் ஆறாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் நிதி உதவி பிரதமரின் பேறுகால தாய்மார்கள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இத்திட்டத்தின் விதிகளை 22 டிசம்பர் 2022 அன்று அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், தகுதியான கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.5,000/- தொகை வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளி மருத்துவமனையில் […]

நாம் அனைவரும் அறிந்தபடி, கருட புராணம் இந்து மதத்திற்கு மிகவும் முக்கியமானது, இது முக்கிய பண்டைய இந்து வேதங்களில் ஒன்றாகும், இது தர்மம் (மத வாழ்க்கை), கர்மா, மரணத்திற்குப் பின் வாழ்க்கை மற்றும் ஒருவரின் செயல்களின் விளைவுகள் பற்றிய ஆழமான தகவல்களை வழங்குகிறது. மன்னிக்க முடியாததாகக் கருதப்படும் கடுமையான செயல்கள், இந்த வாழ்க்கையிலும் அதற்குப் பிறகும் கடுமையான துன்பத்தை ஏற்படுத்துகின்றன. அதைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வோம். பிராமணனின் […]

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜோதீஸ்வரி (30 வயது) என்ற இளம்பெண், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும், என்ஜினீயரான யோதீஸ்வரனுக்கும் (34 வயது) கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. யோதீஸ்வரன், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்மொருள் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு யோதீஸ்வரனும் ஜோதீஸ்வரியும் மூன்று மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர், இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு […]