எலோன் மஸ்கின் xAI நிறுவனம் Grok Imagine என்ற புதிய AI-சாதனப்பூர்வமான படம் மற்றும் வீடியோ உருவாக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது SuperGrok மற்றும் Premium Plus X பயனர்களுக்காக iOS செயலியில் மட்டுமே கிடைக்கின்றது. எலோன் மஸ்க்கின் AI நிறுவனமான xAI ஆனது Grok Imagine அம்சத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்கள் X செயலியில் நேரடியாக உரை அறிவிப்புகளிலிருந்து AI-உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்களை உருவாக்க […]

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் சார்பில் போர் நிறுத்த மீறல்கள் நடந்ததாக வெளியான செய்திகள் தவறானவை என்றும் எவ்வித போர் நிறுத்த மீறல்களும் நடக்கவில்லை என்றும் இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் மான்கோட் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் போர் நிறுத்த மீறலை மீறி […]

தொழில்வளம்‌ பெருகுவதற்கான இணக்கச்‌ சூழலை மேம்படுத்துவதிலும்‌ அதன்‌ மூலம்‌ கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும்‌ உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ ஒன்று, மத்திய அரசின்‌ 60% நிதிப்பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “பிரதமரின்‌ உணவுப்‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ ஒழுங்குபடுத்தும்‌ திட்டம்‌ ஆகும்‌. இந்த திட்டத்தின் கீழ் ரூ.40,000 வரை மானியம் வழங்கப்படும். […]

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு “தொழில்முனைவோருக்கான ChatGPT பயிற்சி வரும் 09.08.2025 தேதி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை – 600 032. தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு, ChatGPT-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் […]

ஹைதராபாத்தில் உள்ள ஐடி துறை ஊழியர்களில் 84% க்கும் அதிகமானோர் கொழுப்பு கல்லீரலில் கொழுப்புச் சுரப்பியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் ஆய்வு காட்டுகிறது என்று சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி, “சமீபத்திய ஆய்வில், ஐதராபாத்தில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களில் 84% பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மத்திய அரசின் கவனத்துக்கு வந்ததா? அப்படியெனில் […]

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் தொடர்பாக இந்திய அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ள அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில்; தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில எதுவாக உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வதவித் தொகை […]