பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், ஓபிஎஸ்-ன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற தலைவர், 3 முறை முதல்வர், அதிமுகவின் முக்கிய தலைவர் என ஓபிஎஸ்-ன் அரசியல் வாழ்க்கையை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது… ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தர்ம யுத்தம் நடத்திய அவர், துணை முதல்வராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.. கட்சிக்கு ஓபிஎஸ், ஆட்சிக்கு என்று […]

சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் “ நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்தின் மூலம் 1,256 உயர்தர மருத்துவ மையங்களில் 17 சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படும். இந்த முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் கட்டணமின்றி முழு பரிசோதனை […]

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து ரூ.74,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் […]

திருவெறும்பூர் அருகே துவாக்குடி அரசு மாதிரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தற்போது வரை மாணவனின் இறப்பிற்கு காரணத்தைக் காவல்துறை கண்டுபிடிக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருவெறும்பூர் அருகே துவாக்குடி அரசு மாதிரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் இரண்டு […]

சென்னை தேனாம்பேட்டையில் பைக் டாக்ஸியில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டார். சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம் பெண், சென்னை தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வியாழக்கிழமை பணி முடிந்து பைக் டாக்ஸி மூலம் வீட்டுக்குச் சென்றபோது, அந்த பைக் டாக்ஸியை ஓட்டிய நபர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை […]

வரும் செப்டம்பர் மாதத்துடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 வயது ஆக உள்ளதால், அவர் ஓய்வு பெறவேண்டும் என எதிர்கட்சிகள் கூறிவரும் நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்வதில் ஆர்எஸ்எஸ் தீவிரமாக உள்ளதாகவும், அடுத்த பிரதமர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவராக இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜவில் 75 வயதானதும் தலைவர்கள் அரசியலில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். 2019 மக்களவை தேர்தலின்போது, 75 வயதுக்கு மேற்பட்ட பாஜ தலைவர்களுக்கு பலருக்கு சீட் […]