ஜூலை மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் […]

பொதுமக்கள் வழங்கும் மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட பணிகள், வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறைவாரியாக தமிழ்நாடு துணை […]

ரயில்வே கேட் அமைந்திருக்கும் லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு 11 முக்கிய நடைமுறைகளை பின்பற்றும் படி இந்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாகனம் மீது பாசஞ்சர் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியம் ஒரு காரணமாக என சொல்லப்படுகிறது. மேலும் இந்த கேட்டில் இன்டர்லாக்கிங் செய்யப்படாமல் இருந்தது மற்றொரு காரணம் அதிகாரிகள் […]

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் நாசாவில் பணிபுரியும் 2,000 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்யவுள்ளதாகவும், இதனால் அறிவியல் திட்டங்கள் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து விண்வெளி துறையிலும், நாசாவின் 18 ஆயிரம் பணியாளர்களிடையேயும் திட்டமிடல், 2026 நிதியாண்டிற்கான பணிநீக்கம் மற்றும் முன்மொழியப்பட்ட பட்ஜெட் குறைப்பு காரணமாக குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டஜன் கணக்கான அறிவியல் திட்டங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் […]

அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1996 காலியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) ஆகிய பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், […]

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் தனது தந்தையாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். ராதிகா கொலை குறித்த தகவல்கள் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன. ஹரியானாவின் குருகிராமில் வசித்து வரும், இந்தியாவின் வளர்ந்து வரும் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். ராதிகாவின் தந்தை தீபக் யாதவ் தனது மகளை ரிவால்வரால் சுட்டுக் கொன்று கொடூரமாக கொலை செய்துள்ளார். 25 வயதான இவர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவுக்காக […]

நம் வாழ்க்கையில் நேரும் இன்பம், துன்பம் அனைத்தும் முந்தைய பிறவிகளில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவே நடக்கின்றன என்று நம் மரபு கூறுகிறது. ஆனால், கடவுள் நினைத்தால் அந்த தலைவிதியே மாற்றியெழுத முடியும் என்றும் நம்பப்படுகின்றது. அப்படிப் புனிதமான மாற்றத்துக்கான வாய்ப்பு தரும் அதிசய தலமாகவே கருதப்படுகிறது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் திரியம்பகேஷ்வரர் கோவில். இந்தத் திருத்தலமானது சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும். ஆனால், இதில் தனித்தன்மை […]

இந்தியாவில் உயர்நிலைப் பள்ளி கட்டணங்கள் குறித்து CoinSwitch நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆஷிஷ் சிங்கால் கேள்வி எழுப்பி உள்ளார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது இன்று நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார அழுத்தமாக மாறிவிட்டது. CoinSwitch மற்றும் Lemonn நிறுவனங்களின் இணை நிறுவனர் ஆஷிஷ் சிங்கால் சமீபத்தில் ஒரு LinkedIn பதிவில், இந்தியாவில் உயர்நிலைப் பள்ளி கட்டணங்கள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அவரின் பதிவில் “ 30% கட்டண […]

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் (25) தனது சொந்த தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் 25 வயதான ராதிகா யாதவ். மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையான இவர் குருகிராமின் செக்டார் 57 இன் சுஷாந்த் லோக்-கட்டம் 2 இல் உள்ள வீட்டில் ராதிகா தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் ராதிகாவை அவரின் தந்தை […]