அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே பணிநிரவல் செய்யப்பட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘இடைநிலை ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் பணி நிரவலுக்கு உட்பட்ட ஆசிரியர்களை விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி ஆணை பெறுமாறு வற்புறுத்தக் கூடாது. அதேபோல், வற்புறுத்தி பணிநிரவல் […]
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் பலியானவர்கள் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளதாகவும், ரூ.500 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிகனமழையால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மலைப்பகுதி முழுவதும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் (SEOC) கூற்றுப்படி, இந்த உயிரிழப்புகள் ஜூன் 20 முதல் ஜூலை 4, 2025 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தன, கனமழையால் ரூ.541 […]
தமிழகத்தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் களப்பணி மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளியில் சேரும் அனைத்து குழந்தைகளும் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில […]
அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சில புளூடூத் ஹெட்ஃபோன்கள், இயர்பட்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனையை வெளியிட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் நீண்டகால பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய செவிப்புலன் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை வழங்கியுள்ளது. இந்த ஹெட்ஃபோன்களால் அதிக ஆபத்து: CERT வெளியிட்ட இந்த எச்சரிக்கை செய்தியின்படி, சோனி, போஸ், மார்ஷல், JBL மற்றும் ஜாப்ரா போன்ற பிரபலமான பிராண்டுகளில் பயன்படுத்தப்படும் ஐரோஹா புளூடூத் சிப்செட்களில் உள்ள குறைபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்து வரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும், இல்லையேல், அவர்களுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை கற்பிக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் […]
வரதட்சணை கொடுமையால் கடந்த வாரம் திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. தற்போது இதே போன்றதொரு சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.. கன்னியாகுமரி மாவட்டம் திக்கனங்கோடு பகுதியை சேர்ந்த ஜெபிலா மேரி என்ற பெண்ணுக்கும் நிதின் ராஜுக்கும் 26 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.. 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.. பெண் வீட்டார் […]
ஜூலை மாதம் தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கான முதன்மை வருமான ஆதரவுத் திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 20வது தவணைக்காக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அடுத்த தவணையை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நிகழ்வின் தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, விவசாயிகள் தங்கள் பயனாளிகளின் நிலையைச் சரிபார்த்து, அவர்கள் தகுதியுள்ளவர்கள் என்பதையும், பிரதம மந்திரி கிசான் […]
பிரபல யூடியூபர் ‘டெக் சூப்பர் ஸ்டார்’ மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெக் பாஸ் என்ற யூ டியூப் சேனல் மூலம் பிரபலமான பிரபல யூடியூபர் சுதர்சன், டெக் சூப்பர் ஸ்டார் என்ற சேனலையும் நடத்தி வருகிறார். மொபைல் போன்கள், லேப்டாப், ஹெட் செட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்து யூ டியூபில் விமர்சனம் செய்து இவர் பிரபலமானார். இதனிடையே சுதர்சன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பணிபுரிந்து […]
Nirav Modi’s brother Nehal Modi was arrested in the US in connection with the Punjab National Bank fraud case.
அஜித்குமார் வழக்கு தொடர்பான நீதி விசாரணையில், நீதிபதி காவல்துறையினரிடம் சரமாரி கேள்வி எழுப்பினார். அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக நடந்து வந்த 4-வது நாள் விசாரணை நிறைவடைந்தது. மதுரை 4-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் 4-வது நாளாக விசாரணை மேற்கொண்டார். கடந்த 3 நாட்களுக்கு மேலாக 30 மணி நேரம் விசாரணை செய்தார். முதல் நாளில் கோயில் ஊழியர்களிடமும், 2-வது நாளில் அஜித்குமார் தாக்கப்படுவதை வீடியோ […]

