இந்தியாவின் வருமான வரித்துறை, 2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளை (ITR) தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் சுமார் 1.65 லட்சம் சம்பளதாரர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப தயாராக உள்ளது. தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் தாக்கல் செய்த ITR கணக்குகளில் உள்ள பிழைகள், தவறான தகவல்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. இந்த நோட்டீஸ்களை அனுப்புவதற்கான […]

திருமணம் செய்வதாக கூறி, ஏமாற்றியதாக ஆர்சிபி பௌலர் யாஷ் தயாள் மீது அவரது முன்னாள் காதலில் புகார் அளித்திருந்த நிலையில், இருவருடனான இன்ஸ்டா சாட்டிங் ஸ்கீரின்ஷாட்டுகள் வைரலாகி வருகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது, உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் திருமண மோசடி புகார் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து, அம்மாநில முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். […]

ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 வங்கதேசத்தினரை நள்ளிரவில் க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்தொழில் உள்ளது. தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை உள்ள நிலையில் பிஹார், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகத்தில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை பிரிவுகளின்கீழ் செயல்படும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி […]

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணத்தை தொடர்ந்து காவல் துறை உயரதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். […]

சாலையோர உணவுக் கடையில் பெண் ஒருவர், செருப்புகளை பொறித்து விற்பனை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வேலை தேடி வெளியூர் செல்வோர்களில் சிலரது பசியை போக்க அதிகம் கை கொடுப்பது கையேந்திபவன் என்று அழைக்கப்படும் சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகள். குறைந்த விலையில் வயிறு நிறைவதால் இந்த கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு சுடச்சுட தயாரிக்கப்படும் உணவு வகைகளின் மசாலா மணத்துக்கு பலரும் மனம் மயங்கி […]

கானா அரசு நாட்டின் உயரிய விருதான’தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ என்ற விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக நேற்று கானா சென்றடைந்தார். விமான நிலையத்தில் கானா அதிபர் மேதகு ஜான் டிராமணி மஹாமா, பிரதமருக்கு சிறப்பு மரியாதையுடன், பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்தார். இந்த மரியாதை இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் […]

திருப்புவனம் அருகே காவல்துறையின் விசாரணையில் உயிரிழந்த அஜித்தின் வழக்கில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.. அதாவது அஜித் மீது திருட்டு புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு பதிவாகியுள்ளது.. வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாக 2011-ம் ஆண்டு நிகிதா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்ப்பட்டுள்ளது. 2010-ல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என்று நிகிதா மோசடி செய்துள்ளதாக எஃப்.ஐ.ஆர் பதிவாகி உள்ளது. பணத்தை […]

செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர் தாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், வலசையூர், அடிமலைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செம்மண் வெட்டிக் கடத்தப்படுவது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24×7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன், ஒளிப்பதிவாளர் நேதாஜி ஆகியோர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். இதில் சிலம்பரசன் காதுகேட்கும் திறனை […]

நவீன உலகத்தின் வசதிகளில் பிளாஸ்டிக் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. ஆனால், இந்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக, மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் மிகச்சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உலகம் முழுவதும் பரவி, சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்பது 5 மில்லிமீட்டருக்கும் குறைவான சிறிய பிளாஸ்டிக் துகள்கள் ஆகும். அவை பெரிய பிளாஸ்டிக் பொருட்கள் சிதைவடைவதால் உருவாகின்றன. மேலும், அழகுசாதனப் பொருட்கள், துணிகள் […]

10, 11- 12-ம் வகுப்பு மாணவர்கள் சேரும் வகையில் ஏஐ, டேட்டாசயின்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம், ஆர்க்கிடெக்சர் டிசைன், இன்ஜினீயரிங் பயாலஜிக்கல் சிஸ்டம், சட்டம் ஆகியவை தொடர்பான 10 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் code.iitm. ac.in/schoolconnect என்ற இணையதளம் மூலம் ஜூலை 25-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவுசெய்ய வேண்டும். பள்ளி இணைப்புத் திட்டம் என்பது ஐஐடி மெட்ராஸில் உள்ள அவுட்ரீச் […]