தமிழக வெற்றிக் கழகம் என்றஅரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் செயற்குழு கூட்டத்தை கூட்டினார். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் நியமிக்கப்படுவதாக தவெக செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தவெக தலைமையில் கூட்டணி அமைக்க ஏற்றுக்கொண்ட கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் […]

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து வர்ஜீனியா நோக்கிச் செல்லவிருந்த விமானம் ஒன்றில், 27 வயதான தாஜ் மாலிக் டெய்லர் என்ற பயணி, தன்னுடன் பயணித்த ஒரு நபரிடம், “என் லேப்டாப் ஒரு வெடிகுண்டு” என்று சொல்லியுள்ளார். இதைக் கேட்ட பயணி அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. எல்லா பயணிகளும் வெளியேற்றப்பட்டு, விமானத்தில் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் முழு சோதனையும் நடத்தினர். முழு விமானத்தையும் ஆய்வு செய்த […]

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கோவையில் மக்களிடையே உரையாற்றிய அவர் “ அறநிலையத்துறையின் நிதியை எடுத்து கல்லூரியை கட்டுவது எந்த விதத்தில் நியாயம்.. அந்த பணம் இவர்களை உறுத்துகிறது.. கோயில் கட்டுவதற்காக உண்டியலில் பணம் போடுகிறீர்கள்.. அது அறநிலையத் […]

ராஜஸ்தானில் இன்று இந்திய விமானப்படையின் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள பானுடா கிராமம் அருகே இன்று இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. ரத்தன்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால், உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விமானம் நடுவானில் சமநிலையற்றதாகத் […]

சென்னை எழும்பூர் காவல் ஆனையர் அலுவலகம் அருகே சரக்கு வாகனம் மோதி ஸ்கூட்டரில் வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் புதுப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதேவி(42) என்பவர் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெண்ணை மோதிய சரக்கு வாகனம் குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மாபெரும் போராட்டம் நடத்துவேன் என்று சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்காமல் விசாரணை கைதிகள் சிறையில் இருப்பது இங்கு தான் நடக்கிறது.. சிறை என்றால் சிறை காவலர்கள் கைதிகளை பாதுகாக்க வேண்டும்.. வழக்கு இருக்கு நீதிமன்றம் உள்ளது.. நாங்கள் குற்றவாளியா, நிரபராதியா என்பதை […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. பேஸ்புக் என்பது தகவல் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல, மக்கள் அதன் மூலம் தங்கள் வேலை, வணிகம் மற்றும் அடையாளத்தையும் மேம்படுத்துகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், உங்களுக்குத் தெரியாமல் யாராவது உங்கள் பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தினால், உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும். சில எளிய வழிமுறைகள் மூலம், உங்கள் பேஸ்புக் கணக்கு தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதை […]

ரூ. 76 லட்சம் மோசடி செய்த புகாரில் நடிகை ஆலியா பட்டின் முன்னாள் PA வேதிகா கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல்துறையினர் ஆலியா பட்டின் முன்னாள் செயலாளர் வேதிகா ஷெட்டியை கைது செய்துள்ளனர். வேதிகா ஷெட்டி ஆலியா பட்டின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 76 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி மே 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. போலி பில்களின் […]