மத்திய கிழக்கு பகுதியில் ஈரானும் இஸ்ரேலும் இடையே நடக்கும் ஏவுகணை மற்றும் சைபர் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சைபர் போர்களால் நேரடியாகத் தாக்கப்படாத மூன்றாம் நாடுகளும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பரவலான தாக்கத்திற்கே “ஸ்பில்ஓவர் எஃபக்ட் (Spillover Effect)” என பெயர். அந்த வகையில், இந்தியா போன்ற நாடுகளும் இந்த தாக்கங்களால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால், தனிநபர்களாகவும், நிறுவனங்களாகவும் அதிகம் எச்சரிக்கையாக […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியை அழிப்பதாக இஸ்ரேல் அச்சுறுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஈரான் சமீபத்தில் ஒரு இஸ்ரேலிய மருத்துவமனையை ஒரு கொடிய கிளஸ்டர் குண்டால் தாக்கியுள்ளது. கிளஸ்டர் குண்டு என்றால் என்ன? கிளஸ்டர் குண்டு என்பது ஒரு […]

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தொடங்கி ஜூன்.26ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை […]

பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் தூய்மை பணியில் ஈடுபட்ட, தூய்மை பணியாளர்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களை கண்டு களித்து வருகின்றனர் அந்த வகையில் சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் சுற்றுலா தளங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள சென்னை பெருநகர […]

இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார ஊடக அதிபர்களில் ஒருவரான சன் டிவி நெட்வொர்க்கின் தலைவர் கலாநிதி மாறன் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். ஆனால் இந்த முறை, அவரின் மிகப்பெரிய சம்பளத்திற்காக அல்ல. தனது இளைய சகோதர் தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸ் காரணமாக.. திமுக எம்.பி. தயாநிதி மாறன், தனது மூத்த சகோதரருக்கு சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பியுள்ளார். 2003 ஆம் ஆண்டு தங்களின் தந்தையும் ஊடக அதிபர் முரசொலி மாறனின் […]

சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறிய 207 கனரக வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையின் கொளத்தூர் பகுதியில், தாயுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளி சென்ற மாணவி தவறி விழுந்து பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் மாணவி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இரண்டு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விபத்தின் எதிரொலியாக சென்னை காவல்துறை […]

இந்தியாவிலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யமாக சன் டிவி குழுமம் திகழ்கிறது. 1993-ம் ஆண்டு முரசொலி மாறனால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது ரூ.24,000 கோடி மதிப்பு கொண்ட மிகப்பெரிய மீடியா குழுமமாக மாறி உள்ளது. இந்த நிலையில் சன் டிவியின் அதிபரான கலாநிதி மாறனுக்கும் அவரின் சகோதரரும் எம்.பியுமான தயாநிதி மாறனுக்கு இருக்கும் மனக்கசப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது கலாநிதி மாறன் மோசடி செய்து சன் டிவி நிறுவன பங்குகளை வாங்கிவிட்டதாக […]

சிவகங்கை மாவட்டத்தின் மறவமங்கலம் அருகேயுள்ள பொத்தகுடி கிராமம், இன்று தமிழகம் முழுக்க மட்டுமல்லாது, சமூக ஊடகங்களிலும் மிகப்பெரிய பாராட்டைப் பெற்று வருகிறது. காரணம்.. சிட்டுக்குருவியை காக்கும் கிராமமக்களின் தீர்மானம். பொத்தகுடி கிராமத்தில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கு 6க்கும் அதிகமான தெருக்கள் உள்ளது. எல்லா ஊர்களையும் போல இந்த தெருக்களில் இருக்கும் தெருவிளக்கிற்கு, ஊரின் இறுதியில் ஒரு மெயின் பாக்ஸ் உள்ளது. இங்கு குருவி ஒன்று கூடு […]