தாயிற் சிறந்த கோவிலும் இல்லை…. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் முதல் சூப்பர் ஹீரோ அப்பாக்கள் தான். ஒரு தந்தை தனது குடும்பத்திற்காக இரவும் பகலும் அயராது உழைக்கிறார், அதனால் அவர் தனது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவும், தனது குடும்பத்தை ஆதரிக்கவும் செய்கிறார். இந்த கடின உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையிலும், அன்னையர் தினம், மகளிர் தினம், காதலர் தினம் என எல்லாவற்றிக்கும் […]
காவல்துறையில் 25 வருடங்கள் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு பெற்றதாக பதவி உயர்வு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. காவல் துறையில் பதவி உயர்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தலைமைக் காவலர் பதவியில் 10 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்து, மொத்தம் 25 ஆண்டுகள் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றும் தலைமைக் காவலர்களை பதவி உயர்வு வழங்கப்படும். நகரங்களில் உள்ள ரேஞ்ச் துணை காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு அதிகாரங்களை வழங்கி, வழிகாட்டுதல்களை […]
அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும் வெளிநாடு செல்வதற்கும் தடையில்லா சான்று பெறுவதற்காக எளிய முறையில் விண்ணப்பிப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியீடு. வெளிநாடு பயணிக்கும் நபர்கள் வைத்திருக்க வேண்டிய அடிப்படையான ஆவணம் பாஸ்போர்ட். இதை பெறுவதற்கு ஒவ்வொரு அரசும் பிரத்யேக நடைமுறைகளை வைத்திருக்கின்றன. அதன்படி, இந்திய அரசு பிரத்யேக இணையதளம், பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும், வெளிநாடு செல்வதற்கும் தடையில்லா சான்று (NOC) […]
துணை தேர்வில் அரியர் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமா தேர்வில் இறுதி செமஸ்டர் மற்றும் துணை தேர்வை எழுதிய மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் அரியர் வைத்துள்ளனர். அம்மாணவர்கள் உயர்கல்வி பயிலவும் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டும் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்து […]
5 நாள் பயணமாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலையில் கனடா சென்றார். பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். கடைசி நாளான நேற்று மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, பிரதமர் மோடி ஜி7 அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். “இந்தியா மற்றும் கனடா […]
தமிழ்நாடு தாபல் துறையில் வேலை தேடுபவர்களுக்கு தற்பொழுது முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு தபால் வட்டாரத்தில் உள்ள போஸ்டல் உதவியாளர், சாட்டிங் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதியாக 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டாரத்தில் கீழ் இயங்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் உள்ள தபால் மற்றும் தபால் பிரிவுக்கும் பிரிவுகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் […]
கிரிக்கெட் விளையாடும் விதிகளில் ஐசிசி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டைத் தொடர்ந்து, இப்போது ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளிலும் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஜூலை முதல் ஒருநாள் மற்றும் டி20 ஆட்ட விதிகளில் மாற்றங்கள் காணப்படும். ஜூலை 2 முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலும், ஜூலை 10 முதல் டி20 கிரிக்கெட்டிலும் இந்த மாற்றம் நிகழவுள்ளது. ஆட்ட விதிகளை மாற்றுவதன் மூலம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையில் […]
தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; ஆண்டுதோறும் ஜூன் 14-ம் தேதி உலக குருதி கொடையாளர் தினமாக […]
திருத்தணி சிறுவன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஏ.டி.ஜி.பி ஜெயராமனைக் கைது செய்ய பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஏ.டி.ஜி.பி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. மனுவை இன்று அவசர வழக்காக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டார். அவரை திருவாலங்காடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், தொடர்ந்து […]
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ‘நிம்பஸ்’ எனப்படும், என்.பி.1.8.1 என்ற புதிய கொரோனா வைரஸ் தற்போது பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ‘நிம்பஸ்’ எனப்படும், என்.பி.1.8.1 என்ற புதிய கொரோனா வைரஸ் தற்போது பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றி மக்களுக்கு பரவிய கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் பரவி […]

