ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் செயற்கை ரத்தத்தை உருவாக்கி அசத்தி உள்ளனர். ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு வகை செயற்கை ரத்தத்தை உருவாக்கியுள்ளனர். மருத்துவ உலகில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.. இது அனைத்து ரத்த வகைகளுடனும் பொருந்தும் என்பது தான் கூடுதல் சிறப்பு.. இந்த செயற்கை ரத்தம் பல உயிர்களைக் காப்பாற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.. ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் புரதமான ஹீமோகுளோபின் மூலம் இந்த செயற்கை ரத்தம் உருவாக்கப்படுகிறது. […]
பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி மற்றும் சொக்கலிங்கபுரம் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கையில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஈடுபட்டார். அரசின் திட்டங்கள் முறையாக வந்து […]
புதுமைபெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் ரூ. 1000 கல்வி உதவித் தொகை பெற உயர்கல்வி பயிலும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்பதை தளர்வு செய்யப்பட்டுள்ளது. சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கை, திருநம்பி, இடைபாலினர் கல்விக்கு உதவும் வகையில் பட்ட […]
குரோஷியாவின் ஜாக்ரெப்பில் நேற்று நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2025 ரேபிட் & பிளிட்ஸ் போட்டியில் உலக சாம்பியனும், இந்திய வீரருமான டி. குகேஷ் ரேபிட் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். போலந்தின் ஜான்-க்ர்சிஸ்டோஃப் டுடா மற்றும் நார்வே கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை முந்தி 14 புள்ளிகளுடன் லீடர்போர்டில் முதலிடத்தைப் பிடித்தார். 19 வயதான நடப்பு உலக சாம்பியனான இவர், ஆரம்ப தோல்வியிலிருந்து மீண்டு, தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளைப் பெற்று, மேக்னஸ் […]
மத்திய அரசு கடந்த ஆண்டு வரை வழங்கிய ரூ.5,886 கோடியில் இதுவரை அமைத்த சாலைகள் எத்தனை என தமிழக அரசுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராம ஊராட்சி, இரண்டு பக்கமும் பவானி ஆற்றால் சூழப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு காலங்களில், பரிசல் போக்குவரத்து தடைபடுவதால், சுமார் 8 […]
டிஎன்பிஎல் தொடரின் குவாலிபையர் 2வது போட்டியில் சேப்பாக் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 2025 சீசன் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. அதில் லீக் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி சோழாஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. லீக் போட்டிகளில் தோல்விகளையே சந்திக்காத சேப்பாக் அணி, பிளே ஆஃப் சுற்றில் ஜூலை ஒன்றாம் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் அடிப்பது போன்ற வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இதனிடையே […]
பிரதமர் மோடிக்கு டிரினிடாட் மற்றும் டொபாகோவின் மிக உயர்ந்த விருதைப் பெற்றார். இது அவருக்கு வழங்கப்படும் 25வது சர்வதேச விருது ஆகும். பிரதமர் நரேந்திர மோடிக்கு டிரினிடாட் மற்றும் டொபாகோ அரசாங்கத்தால் நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருதான ‘தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் மற்றும் டொபாகோ’ வழங்கப்பட்டது . பிரதமர் மோடி அங்குள்ள அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். 140 கோடி இந்தியர்களின் […]
ரியல் எஸ்டேட் அதிபரும், பாஜக பிரமுகருமான அழகப்பன், நில மோசடி செய்த வழக்கில் முக்கிய சாட்சியான நடிகை கௌதமியிடம் 10 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் அளித்தார். அதில் அழகப்பன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் தனது சொத்துக்களை மோசடி செய்து அபகரித்து உள்ளனர். எனவே தனது அசையா சொத்துக்களை பராமரிக்க […]
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே அமைந்துள்ள அழகிய திருச்சிற்றம்பலமுடையான் கோவில், தமிழகத்தில் மிகுந்த பக்தி மற்றும் மரபு வழிபாடுகளால் கவனம் பெறும் ஒரு முக்கிய நடராஜர் தலமாக விளங்குகிறது. இக்கோவிலின் தனிச்சிறப்பாக, பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை கடிதமாக எழுதி, நடராஜருக்குப் பத்திரமாக சமர்ப்பிக்கும் வழிபாட்டு மரபு நடைமுறையில் உள்ளது. இந்த கோவிலில் ‘மனுநீதி முறைப்பெட்டி’ என அழைக்கப்படும் ஒரு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை தாளில் எழுதி, அந்த […]

