நெல்லிக்காய் என்றாலே பிடிக்காதவர்கள் எவரும் இலர். அதனிலும் சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி உண்பவர்கள் தான் அதிகம். ஆனால் அதனை ருசிக்காக உண்கிறோமே தவிர அதன் பயனை நாம் அறிந்து கொள்வது இல்லை. நெல்லிக்காயில் பலமருத்துவ குணங்கள் உள்ளன. இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் இதில் இருப்பதால் பெண்கள் இதனை தொடர்ந்து உண்டு வர வேண்டும். […]
திருப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய நிறுவனத்தில் ஆவின் பால் பிரிவில் கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர்: Veterinary Consultant காலியிடம்: 8 பணியிடம்: திருப்பூர் கல்வித் தகுதி: B.V.SC & A.H with computer Knowledge சம்பளம்: ரூ.43,000 தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிகளுக்கு […]
இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பின் மேம்பாட்டை துரிதப்படுத்தவும், நாட்டில் இயற்கை எரிவாயு சந்தையின் விரைவான வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் அதன் மூன்று விதிமுறைகளான இயற்கை எரிவாயு குழாய் கட்டணம், அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறை திறன் விதிமுறைகளில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தங்கள், 1 ஏப்ரல் 2023 முதல் அமலுக்கு வரும், ஒருங்கிணைந்த கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு ஏதுவாக அமையும். ஒருங்கிணைந்த கட்டணத்தை அமல்படுத்துவது […]
மத்திய அரசின் இரும்பு தாது உற்பத்தி செய்யும் நிறுவனமான குத்ரேமுக் அயன் ஓர் கம்பெனி லிமிடெட் (Kudremukh Iron Ore Company) ஸ்டீல் அமைச்சகத்தில் கீழ் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் முறையைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள். பணியின் முழு விவரங்கள்… பணியின் பெயர் பணியிடம் சம்பளம் வயது Cheif General Manager 1 ரூ.1,20,000-2,80,000 55 வயதிற்குக் […]
பெங்களூருவில் சாலையோரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 67 வயது முதியவரின் மரணம் தொடர்பான விசாரணையில், அவர் தனது வீட்டு உதவியாளருடன் உடலுறவு கொள்ளும்போது இறந்தது தெரியவந்துள்ளது என்று போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில், பாதிக்கப்பட்ட காதலரான வீட்டு வேலைக்காரர், அவரது கணவர் மற்றும் சகோதரர் உதவியுடன் ஆணின் உடலை பிளாஸ்டிக் கவரால் மூடி அப்புறப்படுத்தியது தெரியவந்தது. பிடிபடுவோம் என்ற பயத்தில் தான் இவ்வாறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். […]
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றம் முன்பு எடுத்து வைக்க அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தின் கலாச்சாரப் பெருமையினை நிலை நிறுத்திடும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டி அமைந்துள்ளது. ஜல்லிகட்டிற்கு தடை வந்த போது அவசர சட்டம் கொண்டு வந்து தடையை நீக்கியது அதிமுக அரசு. திமுக அங்கம் வகித்த மத்திய அரசு 2011-ம் ஆண்டு […]
மகாராஷ்டிர அரசு 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு வாக்காளர் பதிவை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ராஜ்பவனில் வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண்மைச் சாரா பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தில் பேசிய மாநில உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், தேசியக் கல்வி கொள்கையின் கீழ் நான்காண்டு பட்டப் படிப்புகளை ஜூன் 2023 முதல் அரசு அறிமுகப்படுத்தும் என்றார். தேசிய கல்விக் கொள்கையின் […]
கோவை பீளமேடு பகுதியில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மின் இணைப்புடன் ஆதார் என் இணைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:- அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் திமுக அரசு மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஆதார் எண் இல்லை என்றாலும் தற்போது கட்டணம் செலுத்தலாம். ஆதார் எண் கொடுப்பது நல்லது. மின் […]
திமுக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் கவர்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் தான் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.அதே போல் தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் கடந்த நிலையில் இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த திட்டம் குறித்து எதிர்க்கட்சிகளும் பல கேள்விகளை முன் வைத்தனர். இந்நிலையில் இந்த திட்டத்தை உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி வைக்கலாமா என்பது […]
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் சென்னை மற்றும் அதன் […]