டெல்லியில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினரை கொன்று குவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (42). இவரது மனைவி தர்ஷன் சைனி (40). இவர்களுக்கு கேசவ் என்ற மகனும், ஊர்வசி (22) என்ற மகளும் உள்ளனர். 25 வயதான கேசவ் படித்து முடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு போதைக்கு அடிமையாகி ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால், அடிக்கடி […]
மேகாலயா – அசாம் எல்லையில் போலீஸாருடன் நடந்த மோதலில் மேகாலயாவைச் சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இணைய சேவை ரத்து செய்யப்பட்டதுடன், வேறு மாநில வாகனங்கள் மேகாலயாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் அசாம் எல்லையையொட்டி உள்ள மேற்கு ஜெய்ன்டியா மாவட்டத்தில் லாரியில் மரம் கடத்துவதாகக் கூறி, அசாம் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட […]
தற்போது காலகட்டத்தில் காதலிப்பதாக கூறி ஏமாற்றி வருகின்ற நிலை எங்கு பார்த்தாலும் கேட்கும் அளவிற்கு நடைமுறை காலம் இருக்கிறது. திருநெல்வேலி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவிலின் அருகே முத்து ஜவகர்(27) என்ற இளைஞர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மேலும் இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் முத்து அதே பகுதியில் வசித்து வரும் ஒரு சிறுமியிடம் தான் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அந்த […]
திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் ரமேஷ் (36). ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் தனது மனைவி கவிதா மற்றும் 2 பிள்ளைகளுடன் ராஜீவ் காந்தி நகரில் வசித்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு மாலையிட்டு பாத யாத்திரை சென்று வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து ,இந்த ஆண்டும் சில நாட்களுக்கு முன்னர் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலைக்கு மாலை போட்டுள்ளார். இந்த நிலையில் சில காரணங்களால் அவர் மாலையை கழற்றியுள்ளார். இது […]
வலப்பனை என்ற பிரதேசத்தில் இன்று மாலை நேரத்தில் உலக உணவுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் முக்குனகாபிட்டிய கலங்கவத்தின் பகுதியில் வறுமையை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது. அந்த இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மகள், மருமகன், மாமியார் என மூவரும் வந்திருக்கிறார்கள். இதனிடையே மருமகன் மற்றும் மாமியார் இருவருடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் வார்த்தையாக இருந்த தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. ஆத்திரமடைந்த மருமகன் அப்போது தான் […]
டெல்லி மாநகர பகுதியில் யோகேஷ் குமார் தனது மனைவி அர்ச்சனாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் விஹார் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு, ஞாயிற்றுக்கிழமை அன்று தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் யோகேஷ் குமார் தன்னுடைய மனைவியைக் கொலை செய்துவிட்டேன் என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்ற போது அவரின் மனைவி அர்ச்சனா மூச்சின்றி தரையில் விழுந்த கிடப்பதை காவல்துறையினர் பார்த்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு […]
ஆந்திரா மற்றும் தெலுங்கனாவில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே சங்கராந்தி(பொங்கல்) ரிலீஸில் முன்னுரிமையில் தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும், டப்பிங் படங்களுக்கு மீதம் இருக்கும் தியேட்டர்கள் தான் தரப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து, தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கி, விஜய் நடிக்கும் வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. […]
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தை விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உக்ரைன் போர், கொரோனா ஊரடங்கு, பொருளாதாரச் சரிவு, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி காரணமாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே […]
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் நகரின் உள்பகுதியில் இயங்கும் மதுக்கடைகளுக்கு டிசம்பர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகைத் தீப திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பல மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலையில் குவிவார்கள். கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்ற விழா இம்மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 30ஆம் […]
நம் நாட்டின் அண்டை நாடான சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில், நேற்று முன் தினம் வேலை நடைபெற்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர தீ பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து, அந்த பகுதிக்கு 63 தீயணைப்பு வாகனங்களும் அதனுடன் 240 தீயணைப்பு துறை வீரர்களும் வந்தனர். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் போராடிய பின்னரே தீயை அணைத்துள்ளனர். இருந்த […]