மெட்டா, டுவிட்டர், அமேசான் உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்கள் ஒரே நேரத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து 2 லட்சம் பேரை பணிநீக்கம் செய்துள்ள நிலையில் இன்னும் மோசமான நிலை வரவுள்ளது என்று எச்சரிக்கின்றனர். அக்டோபர் 2022ல் மட்டும் இந்தியர்கள் 5,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 16,000 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். இதற்கிடையே பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக […]

உதவிக்கு யாருமின்றி தனியாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட கர்ப்பிணி பெண் நடுவீதியில் பிரசவித்த அவலம் அரங்கேறியுள்ளது. திருப்பதியில் உதவிக்கு யாரும் இல்லாமல் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கருவுற்ற நிலையில் பெண் வந்துள்ளார். அவரை அனுமதிக்க மறுத்த நிர்வாகம் வெளியில் அனுப்பியுள்ளது. இதனால், வளாகத்தில் காத்திருந்த அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு துடிதுடித்துள்ளார். அங்கிருந்த சிலர் தாங்கள் வைத்திருந்த போர்வையை திரை போன்று பயன்படுத்தி அந்த பெண்ணிற்கு பிரசவம் […]

பெற்ற குழந்தைகளுக்கு இருக்கும் அதே உரிமை தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உண்டு எனவும் வளர்ப்பு பிள்ளைகளும் பெற்றோரின் வேலையை பெறலாம் என கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசுப் பணியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது இறந்துவிட்டால், அந்த நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுவதுண்டு. பெரும்பாலான நேரங்களில் அந்த வேலை இறந்தவரின மகனுக்கோ, மகளுக்கோ வழங்கப்படும். ஆனால், ஒருவேளை இறந்தவருக்கு வளர்ப்பு பிள்ளைகள் இருந்தால் இந்த வேலை […]

தருமபுரியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 குரூப்-2 ஏ முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை தொடங்க உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்த்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது. […]

இந்தியா நியூசிலாந்து ஆடிய 3-வது டி20 போட்டி மழையால் தடைபட்ட நிலையில் இன்றைய ஆட்டம் டை ஆனது. இதையடுத்து இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3-வது மற்றும் இறுதி டி20 போட்டி இன்றைய ஆட்டத்தின் முதலே மழை குறுக்கிட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட் செய்தது. ஹர்திக் தலைமையில் இந்தியா விளையாடியது. நியூசிலாந்தின் தொடக்க வீரர் கான்வே 49 பந்துகளில் 59 ரன் எடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது. […]

சென்னை விமான நிலையத்தில் தரை தளப் பணிகளுக்கு மேலும் இரண்டு புதிய தனியார் ஏஜென்சிகள் நியமிக்கப்படுவதால் 4000 பேருக்கு கூடுதல் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமானங்கள புறப்பாடு, தரை இறங்குவது மற்றும் பயணிகளின் உடைமைகள் வருவது ஆகியவற்றின் கால தாமதங்கள் ஏற்படாது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது, […]

மகளிர் சுய உதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்ய துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கடலூரில் கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த விவசாயத் துறை நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கொட்டிய கனமழையால் பாதிக்கப்பட்ட, விளைநிலங்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மகளிர் சுய உதவி குழு கடன்களை […]

காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகேதாது குறித்து விவாதிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு வருகின்றது. கர்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும், மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு விசாரணையில் இருந்து வருகின்றது. மேகேதாது […]

பா.ஜ.க.விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 8 ஆண்டுகளாக கடன் வாங்கில பலருக்கு உதவி செய்திருக்கின்றேன் பா.ஜ.க.வுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியது வருத்தம் அளிக்கின்றத. புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க நேரம் அளிக்காமல் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன். என்னிடம் விசாரணை நடத்தாமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சி பொறுப்புகளில் […]