முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். தற்போது அதிமுக பொருளாளராகவும் உள்ளார். சென்னையில் அவர் வீட்டில் இருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயம் தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் முதற்கட்ட பரிசோதனை மற்கொண்டு வருகின்றனர். எனவே தொண்டர்கள் மருத்துவமனை அருகே கூடியுள்ளனர். இதனால் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட உள்ள விலையில்லா வேட்டி சேலைகள் தயாரிக்கும் பணி அதி வேகத்தில் நடைபெற்று வருகின்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதிக்குள் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்க முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் மக்கள் நியாயவிலைக்கடைகள் மூலம் விலையில்லா வேட்டி, சேலைகளை வாங்கிக் கொள்ளலாம். பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் […]
அஜித் நடித்து வெளியாக உள்ள ’துணிவு’ திரையரங்க உரிமையை ’லைகா’ நிறுவனம் பெற்றுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாக உள்ள திரைப்படம் ’துணிவு’. ரசிர்கள் மத்தியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் தமிழகத்தில் ரெட்ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகின்றது. இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியானது. தற்போது தியேட்டரிக்கல் ரைட்ஸ் எனப்படும் திரையரங்க உரிமையை ’லைகா’ நிறுவனம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை அந்நிறுவனம் டுவிட்டரில் […]
கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் இயங்கிவரும் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் கல்லூரி முடிந்த பிறகு, 40 மாணவா்களை ஏற்றிக் கொண்டு சங்கராபுரம் வட்ட பகுதியில் உள்ள , லட்சுநாயக்கன்பட்டியை நோக்கி கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்து எதிர்பாராத விதமாக இந்திலி பகுதியில் வந்தபோது, திடீரென அச்சு முறிந்து கட்டுப்பாட்டினை இழந்த அந்தப் பேருந்து, சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் ஒன்றின் மீது மோதி […]
மதுரை மாவட்ட பகுதியில் பாலகிருஷ்ணன் – மாலதி என்ற தம்பதி வசித்த வந்துள்ளார். மூத்த மகனான ஜெய்சங்கர் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். இளைய மகனா சிவ சங்கர் மூன்றாமாண்டு மருத்துவபடிப்பு பயின்று வருகின்றார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலகிருஷ்ணன் குடும்பத்தார் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதம் மாறி பகுதி நேரம் போதக ஊழியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் உடல்நலக்குறைவின் காரணமாக மாலதி கடந்த 8ஆம் திகதி […]
குஜராத் மாநில பகுதியில் அகமதாபாத்தில் இருந்து சென்னையை நோக்கி செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் நேற்று முந்தைய தினத்தில் புறப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 2.30 மணியில் திருப்பதி மாவட்டத்தின் கூடூர் ரயில் நிலையத்தில் சந்திப்பு இடையே வந்த போது, ரயிலில் உள்ள சமையல் செய்கின்ற பெட்டியில் தேவையான காலை உணவு பயணிகளுக்கு தயாரிக்க ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். திடீரென அந்த பெட்டியில் தீப்பற்றி புகை பரவிய நிலையில், பயணிகள் […]
சேலம் மாவட்ட பகுதியில் உள்ள அரியானூரில் தனியார் மருத்துவக் கல்லூரியில் அருள்மொழி குமார் என்பவரின் மகன் நிர்மல் குமார் முதுநிலை பிசியோதெரபி துறையில் பயின்று வருகிறார். இந்த நிலையில் தினமும் சொந்த ஊருக்கு சென்று திரும்ப முடியாத நிலையால் கல்லூரிக்கு எதிரிலே தனியார் விடுதியில் ரூம் ஒன்றை எடுத்து இருந்துள்ளார். தினமும் தனது பெற்றோரிடம் செல்போனில் பேசுவது வழக்கமாக கொண்ட நிர்மல் நேற்று காலையில் இருந்து பெற்றோரிடம் பேசவில்லை. பெற்றோர்களே […]
பிரேசில் நாட்டில் மார்செல்லா எலன், 31 வயது , ‘மாடலிங்’ செய்து வருகின்ற நிலையில், தொழிலதிபர் ஜோர்டான் லோம்பார்டி ,40, காதலித்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததை தொடர்ந்து, ஜனவரியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக, பிரேசிலியா நகரில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இருவருமே மது மற்றும் கஞ்சா புகைத்து உச்சகட்ட போதையை அடைந்துள்ளனர். இதனிடையே இருவருக்கும் […]
முல்லைத்தீவு பகுதியில் உள்ள கிழக்கு பகுதியில் 2 வயது பெண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து புல்மோட்டை என்கிற வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கே சிகிச்சைக்கு பலனின்றி திருகோணமலை மாவட்ட பகுதியில் உள்ள வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் குழந்தையின் உடலில் ஐஸ் போதைப் பொருள் கலந்துள்ளது என தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து, விசாரணையில் குழந்தையின் தந்தை உயிர்க்கொல்லி என்கிற ஐஸ் போதைப் […]
கேரள மாநில பகுதியில் உள்ள காக்கநாடட்டில் மாடல் அழகியான 19 வயது இளம் பெண் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு தோழியாக இருந்துள்ளார். அவர்கள் இருவரும் நேற்று முந்தைய தினத்தின் இரவில் கொச்சி எம் .ஜி சாலை பகுதியில் நிகழ்ந்த ஒரு பார்ட்டிக்கு சென்றுள்ளனர். அந்த ராஜஸ்தான் பெண்ணினுடைய மூன்று ஆண் நண்பர்களும் அதே பகுதிக்கு சென்றுள்ளனர். அந்த நபர்கள் மாடல் அழகிக்கும் அறிமுகமான நிலையில், பார்ட்டியில் […]