தினமும் காலை பொழுதில் மனது மற்றும் உடலை புத்துணர்ச்சியாக மற்றும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க இதனை செய்தால் போதும். உடற்பயிற்சி : காலை நேரத்தில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு லிட்டர் அளவுக்கு தண்ணீர் குடித்தால், உடல் உபாதைகள் சரளமாக வெளியேறும். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சியில் முதலில் சில வார்ம் அப் செய்து விட்டு, அதன் பின்னர் கடினமான சில பயிற்சிகளை செய்ய […]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் வெளிவந்த 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் வந்திருந்தபோது தேர்தல் பிரசார மேடையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த படுகலை வழக்கில் 26 […]
தாலியை கழற்றியது கணவனுக்கு இழைக்கும் மோசமான கொடூரமான செயல் என்று சமீபத்தில் வெளி வந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய நிலையில் அப்படி ஒரு தீர்ப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவி தாலியை கழற்றியது தொடர்பாக தீர்ப்பு வந்தது. இதில் திடீர் திருப்பமாகதாலியை கழற்றியது கணவனுக்கு இழைத்த மோசமான கொடுமை என தீர்ப்பில் குறிப்பிடவே இல்லையே என நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. […]
குழந்தைகளை விவாகரத்திற்கு பின்னர் யார் வைத்திருப்பது என்பது தொடர்பான விவகாரத்தில் இவர்கள் சம்மந்தப்பட்ட குடு மதுரை மாவட்டத்தை சேர்ந்த துர்கா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனது இரண்டு மைனர் குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக நீதிபதிகள் விசாரணை நடத்தினர். மதுரை தல்லாகுளம் காவல்துறை ஆய்வாளர் ஆஜராகி மனு குறித்து விசாரணை நடத்தி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் குழந்தையை மனுதாரரின் […]
தாத்தா, கொல்லு தாத்தா, பாட்டி, கொல்லுபாட்டி என மொத்த சொந்தங்களுடன் ஒரே குடும்பமாக 72 பேரும் ஒன்றாக சமைத்து வாழும் குடும்பத்தினர் பற்றிய புகைப்படம் வைரலாகி வருகின்றது. மகாராஷ்டிராவில் சோலாபூர் என்ற பகுதியில் 72 பேர் கொண்ட ஒரு குடும்பம் வாழ்ந்து வருவது பிற மாநில மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகளாகவே இப்படி கூட்டுக்குடும்பமாகத்தான் வாழ்ந்து வருவதாக நெகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு […]
70 வயதான ஏழை முதியவரை 19 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட நிலையில் எதற்காக இந்த திருமணம் நடந்தது என இந்த ஜோடி தகவல் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தானில் 19 வயது இளம்பெண் ஒருவர் 70 வயது மதிக்கத்தக்க நபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் தனித்துவமான காதல் கதை சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது. 70 வயதான ஏழை முதியவரான லியாகத் அலி (70) இவர் ஷூமைலாஅலி (19) […]
பள்ளி மாணவி ஒருவர் பள்ளியின் முதல் தளத்திலிருந்து குதித்துதற்கொலை முயற்சிசெய்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்தியதில் பகீர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தூத்தக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ளது சாயர்புரம். இதில் செயிண்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அருகில் உள்ள எல்லைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து . இவர் மகள் சந்திய வேணி அப்பள்ளியில் 11ம் வகுப்பு […]
மெட்டா இந்தியாவின் துணைத்தலைவராக மெட்டா நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த சந்தியா தேவநாதனை நியமித்துள்ளது. இது தொடர்பாக ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மெட்டாவின் நீண்ட கால வளர்ச்சிக்கும் இந்தியாவிற்கான அர்ப்பணிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் சந்தியா தேவநாதன், நிறுவனத்தின் வணிகம் மற்றும் வருவாய் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்ப்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் தலைவராக இருந்த அஜித் மோகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு போட்டி நிறுவனமான […]
ஐரோப்பிய யூனியனைத் தொடர்ந்து, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட் சாதனங்களுக்கும் பொதுவான சார்ஜிங் போர்டாக டைப் சி-ஐ ஆக்குவதை இந்தியாவும் பரிசீலிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அனைத்து ஸ்மார்ட் சாதனங்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் குறைந்த விலை ஃபீச்சர் ஃபோன்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான விவாதங்களை நடத்திய நிலையில் அமைச்சரவைகளுக்கு இடையிலான பணிக்குழுவில் புதன்கிழமை இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு […]
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 28 வயது இளம்பெண்ணான ஷ்ரத்தாவை கொடூரமான முறையில் கொலை செய்து 35 கூறுகளாக்கி காட்டுப்பகுதியில் வீசினான். இந்த வழக்கில் அஃப்தாப் பூனாவாலா என்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொலை செய்யப்பட்ட பின் ஷ்ரத்தாவை எங்கு வைப்பது என்று தெரியாமல் 300 லிட்டர் ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளான். அதில் 35 கூறுகளாக உடலை வெட்டி பதப்படுத்தி […]