நியூசிலாந்து – இந்தியா மோதும் முதல் டி20 போட்டி நாளை வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு தொடங்குகின்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் […]

தீபாவளிப் பண்டிகைக்கு அடுத்த நாள் அளித்த விடுமுறையை ஈடு செய்ய வரும் சனிக்கிழமை வேலைநாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகையான அக்டோபர் 24ம் தேதி அரசு விடுமுறை. அதற்கு முந்தைய நாட்கள் சனி, ஞாயி எனவே பண்டிகைக்கு அடுத்த நாள் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு ஒரு நாள் கூடுதலாக விடுமுறை அளிக்க கோரிக்கை  விடுக்கப்பட்டது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் வசதிக்காகவும் விடுமுறை வழங்க கோரிக்கை […]

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துரைமுருகன் கூட்டுறவு என்றாலே கடன் தள்ளுபடி செய்வார்கள் என்றால் எப்படி ஆட்சி நடத்துவது கடன் வாங்கினா ஒழுங்கா கட்ட வேண்டும் என கூறியது சர்ச்சையாகி உள்ளது. காட்பாடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த் ,ஜெகத் ரட்சகன் […]

இலங்கையில் இருந்து வந்த தமிழ் குடும்பங்களை அகதிகளாக முகாமில் வைக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து 20-ம் தேதி கூடலூரில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ’’இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்திய தமிழ் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் 15,000 பேர் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்கள். இவர்கள் […]

வளர்ந்து வரும் டிஜிட்டல் துறைக்கு ஏற்ப தற்போது அனைத்து இடங்களிலும் பணம் செலுத்துவதற்கு QR Code வந்துவிட்டது. அடுத்த கட்டமாக  பாதுகாப்பிற்காக  இத்திட்டம் வீட்டு உபயோக சிலிண்டர்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. சிலிண்டர் திருடுபோதல் மற்றும் இதில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்கவும் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தவும் QR Code பயன்படுத்தப்படுகின்றது. விரைவில் எல்.பி.ஜி. சிலிண்டர்களில் QR Code வசதிகள் வழங்கப்படும் என்றும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மத்தி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் […]

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் வரும் 19ஆம் தேதி செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதில் பிரச்சனை ஏற்படும் என்பதால் அடுத்த நாளான 25ஆம் தேதி விடுமுறை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, அக்டோபர் 25ஆம் தேதி […]

கல்லூரி மாணவி ஒருவரை மாணவர்கள் ராக்கிங் செய்து முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் பெர்காம்பூர் பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பினாயக் ஆச்சார்யா கல்லூரியில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த ராக்கிங் வீடியோவில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஒரு மாணவியை ராகிங் செய்கின்றனர். ஐ லவ் யூ என கூறி மாணவியை வலுக்கட்டாயமாக முத்தமிடுகின்றனர். ஒவ்வொரு முறையும் […]

தவறான சிகிச்சையால் கால்பந்தாட்ட வீராங்கனை உயிரிழந்ததை அடுத்து பிரியாவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறிவிட்டு அரசு வீடு வழங்கும் ஆணையை வழங்கினார். கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் ப்ரியாவின் குடும்பத்தினர் வீடு இன்றி கஷ்டத்தில் இருப்பது […]

மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்த 4 வழக்குகளிலும் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்திமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து, அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது உயர்நீதிமன்றம் கிளை தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், B.புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் […]

வங்கிகள் டிசம்பர் மாதம் 13 நாட்களுக்கு ’விடுமுறை’ அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் அந்த குறிப்பிட்ட நாட்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ஆஃப்லைன் பணிகள், பணம் பரிவர்த்தனைகள், பணம் எடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்பவர்கள் மேற்கொள்ள முடியாது.இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியி்டடுள்ள தகவலில் 13 தினம் விடுமுறை வருவதால் உங்கள் பணிகளை அதற்கேற்றார் போல நீங்கள் திட்டமிட்டுக்கொள்ளுங்கள் என தெரிவித்துளள்ளது. […]