காரைக்குடி இரயில்வே சந்திப்பிலிருந்து புறப்பட்ட பல்லவன் விரைவு இரயில் , நேற்று நண்பகல் நேரத்தில் சென்னை எழும்பூருக்கு இரயில் நிலையத்தை வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு, வழக்கம் போல் ஆர்.பி.எஃப் காவலர் நிரஜ்குமார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சோதனை செய்துள்ளனர். இந்த நிலையில் ரயிலின் ஒரு டிராலி பை இருந்தது. அதனை திறந்து பார்த்தபோது, 22 பவுன் தங்க நகைகள் மற்றும் இதன் ரூ.8.24 லட்சம் இருந்துள்ளது. […]
கள்ளக்காதலி வேறு ஒருவருடன் உல்லாசமாக இருந்ததால், கள்ளக்காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வம் (37). இவரின் மனைவி நித்யா (35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த கலைமணிக்கும் செல்வத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 636 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக பதிவாகியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,003 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் […]
ஹெட்செட் பயன்படுத்துவது மற்றும் சத்தமாக இசையமைக்கும் இடங்களில் பயணிப்பது காரணமாக 100 கோடிக்கும் மேலான இளைஞர்கள், வயது வந்தோர்களுக்கு காது கேளாமை ஏற்படும் அபாயம் உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் உலகளவில் 430 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், BMJ குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இளைஞர்கள் குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்கள் போன்ற தனிப்பட்ட கேட்கும் […]
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த 9ஆம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஓரிரு நாட்களில் வலுவிழந்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் […]
முன்னுரிமை பட்டியலில் மாற்றுத் திறனாளிகளை சேர்க்கவும் அடிப்படை தகுதிகளாக நிலமற்றவர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி சட்டபேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கட்ட வருவாய்த் துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்ற அறிவிப்பை […]
கத்தோலிக்க சிரியன் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Regional Sales Manager – Gold Loan பணிகளுக்கு என மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.. மேலும் பணியில் […]
10 வயது சிறுமியை 25 இளைஞர்கள் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பத்தினர் அங்கிருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர், ஆட்டோவில் புறப்பட்டுச் சென்ற அவர்கள், கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை திருடிச் செல்வதாக அப்பகுதி இளைஞர்களுக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 25 இளைஞர்கள் அந்த ஆட்டோவை விரட்டிச் […]
நீளமான அடர்த்தியான கூந்தலைப் பெறுவதற்கு உங்கள் வீட்டில் உள்ள கிழங்கு வகையான உருளைக்கிழங்கு ஒன்றை மட்டும் வைத்து எவ்வாறு பலன் பெறுவது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். தவறான உணவு பழக்கம், தண்ணீர், இரசாயனம், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் முடி உதிர்வு ஏற்படும். மேலும் இரசாயணம் மிகுந்த ஹேர் ப்ராடக்ட்களை பயன்படுத்தும்போது மேலும் கூந்தல் உடைந்து, முடி கொட்ட ஆரம்பிக்கும். உருளைக்கிழங்கு சாறு முடி வளர்ச்சியை தூண்ட கூடியது. […]
நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வரும் 19ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறுகையில், “வங்கி கிளைகளில் எங்கு கூடுதல் ஊழியர்கள் உள்ளார்களோ அவர்களை ஊழியர் பற்றாக்குறை உள்ள வங்கி கிளைகளுக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம் அனைத்து கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பர். ஆனால், சில […]