சென்னை மாநகர பகுதியில் தாம்பரத்தில் காளிதாஸ் மற்றும் மகன் சுரேஷ் குமார் வசித்து வருகின்றனர். இவர் ஊர்களுக்குச் சென்று வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் வேலையை செய்து கொண்டிருந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினர் சம்மதித்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஏழு மணிக்கு புதுச்சேரி அருகே உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடந்துள்ளது. வரவேற்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று […]
கால்பந்தாட்ட வீராங்கனை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையைச் சேர்ந்த பிரியா என்ற மாணவி சில நாட்களுக்கு முன்பு கால்பந்தாட்டத்தின்போது முட்டியில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அவருக்கு உணர்விழப்பு நடைபெற்றது. கடந்த 8ம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருப்பது […]
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை இந்திய டி20 அணியில் சேர்க்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு டி20 உலகக்கோப்பையிலும் இந்தியாவின் பேட்டிங் அணுகுமுறை மிகவும் பயந்து ஆடுவதுபோல் இருந்தது. மற்ற டி20 தொடர்களில் இந்திய அணி நல்ல தொடக்கத்தை அளித்தது உண்மை என்றாலும், 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஓபனர்கள் ரோகித் சர்மா மற்றும் கேஎல் […]
மிசோரமில் கல்குவாரி விபத்தில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தெற்கு மிசோரமின் ஹனாதியால் மாவட்டத்தில் மவ்தார் பகுதியில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் நேற்று 13 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென குவாரியில் கற்கள் சரிந்து விழுந்துள்ளன. இதில், ஒரு தொழிலாளி தப்பி ஓடிய நிலையில், 12 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எல்லை […]
அமேசான் நிறுவனம் நஷ்டத்தை சந்திப்பதால், அதன் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த சில காலாண்டுகள் லாபகரமாக இல்லாததால், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரம் முதல் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடும் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மொத்த பணிநீக்கங்களின் எண்ணிக்கை சுமார் 10,000-ஆக இருந்தால், அது அமேசான் வரலாற்றில் மிகப்பெரிய […]
கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கிவிட்டதாக அறிவித்த நித்தியானந்தா, வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியாவை விட்டு சென்றுவிட்டதாக சில ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா அறிவித்தார். கைலாசா என்ற நாட்டின் அதிபராக இருப்பதாக கூறிய இவர், நிர்வாக ரீதியாக நாட்டிற்கான அமைச்சர்கள் பெயர்களையும் அறிவித்தார். மேலும், கைலைசா நாட்டிற்காக தனி வங்கி, தனி பணம் என்று கூறினார். ஆனால், அந்த நாடு எங்கு உள்ளது, எப்படி இருக்கும் […]
சென்னை மாநகர பகுதியில் வெங்கடபுரத்தில் யுவராஜ் – கௌசல்யா தம்பதிகள் இவர்களின் பெண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். நேற்று யுவராஜ் வழக்கம் போல் வேலைக்கு சென்ற பின்னர் , மனைவி வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒன்றறை வயது குழந்தை வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்துள்ளது. இதனிடையே அந்த சிறுபிள்ளை விளையாடிய பொம்மையானது மீன் வளர்ப்பு தொட்டியில் விழுந்த நிலையில், அதனை எடுக்க குழந்தை முயலும் போது மீன் […]
கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்து புதைத்த மனைவி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். டெல்லி காஜியாபாத் என்ற நகரத்தில் வசிப்பவர் சவிதா. இவரின் கணவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். அவரின் கணவர் சந்திர வீர்-ஐ அவரின் சகோதரர் கடத்தி சென்றுவிட்டதாக போலீசில் புகார் செய்திருந்தார் சவிதா. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், எவ்வித துப்பும் துலங்காமல் இருந்தது. சமீபத்தில் இவ்வழக்கில் போலீஸாருக்கு […]
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் முருகன் அவரது மனைவி சுஜாவுடன் தாந்தவிளை பகுதியில் வசித்து வருகின்றார். இரண்டரை மாதங்களுக்கு முன்பே இருவருக்கும், திருமணம் நடந்திருக்கிறது. இதனிடையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு முருகன், மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க பட்டுள்ளார். அதன் பிறகு , மருத்துவரிடம் மனைவி ஸ்லோ பாய்சன் தந்து விட்டதாக கூறி, இது பற்றி அவர் காதலனுடன் வாட்ஸ்ஆப் செயலியில் பகிர்வு செய்துள்ளார். இதன் மூலமாகவே நான் அறிந்தேன் என்று ஆதாரங்களையும் காண்பித்துள்ளார். […]
தெலங்கானா மாநில பகுதியில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனத்தினர் பழைய விமானம் ஒன்றை ஓட்டலாக மாற்றி மக்களை ஈர்க்க முடிவு செய்தார். இதனை தொடர்ந்து கொச்சியில் ஒரு பழைய விமானம் வாங்கி அதனை ராட்சத லாரியில் வைத்து ஹைதரபாத்திற்கு கொண்டு வந்துள்ளார். லாரியின் வழியாக கொண்டு வரப்பட்ட நிலையில் விமானம் மேதரமெட்லா பகுதியில் உள்ள ஒரு மேம்பாலத்தின் கீழே அடியில் மாட்டிக்கொண்டது. மேலும் இந்த நிகழ்ச்சியை, அப்பகுதி மக்கள் வீடியோவாக […]