2021 சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுப்படி, 2023 செப்டம்பர் 15ஆம் தேதி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை திமுக அரசு தொடங்கியது. அதன்படி, மாதந்தோறும் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே 1.14 கோடி பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், இத்திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக நாளை (ஜூன் 4) மாபெரும் முகாம் தமிழ்நாட்டில் நடக்கிறது. மொத்தம் […]

கிரேக்க நாட்டில் உள்ள ரோட்ஸ் கடற்கரையில் இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரோட்ஸ் கடற்கரையிலிருந்து 16 மைல் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியின் பெரும்பகுதியை உலுக்கியது .இந்த நிலநடுக்கம் துருக்கி, எகிப்து, சிரியா, கிரீஸ் மற்றும் அருகிலுள்ள பல நாடுகளிலும் உணரப்பட்டதாக பிராந்திய நில அதிர்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. டோடெக்கானீஸ் தீவுகள் பகுதியில் 68 கிலோமீட்டர் (42 மைல்) […]

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் 18-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. ”ஈ சாலா கப் நம்தே” என முழங்கி வரும் ஆர்சிபி, பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்ள உள்ளது. இதில் பெங்களூரு அணி ஏற்கனவே 3 முறையும், பஞ்சாப் அணி ஒரு முறையும் இறுதிப் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், கோப்பையை வென்றதில்லை. இதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. பஞ்சாப் […]

டிஜிட்டல் இணைப்பு விதிமுறைகளுக்கான சொத்துக்களின் மதிப்பீடு, 2024” இன் கீழ் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; டிஜிட்டல் இணைப்பு விதிமுறைகளுக்கான சொத்துக்களின் மதிப்பீடு, 2024” இன் கீழ் டிஜிட்டல் இணைப்புக்கான சொத்துக்களின் மதிப்பீட்டை மதிப்பிடுவதற்கான ‘வரைவு கையேட்டை’ இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2025 மே 13 அன்று வெளியிட்டது. இதுகுறித்த பங்குதாரர்களின் […]

கருட புராணம் பல ரகசியங்களைச் சொல்கிறது. இறந்த பிறகு ஆன்மா எவ்வாறு பயணிக்கிறது, எங்கு செல்கிறது, மறுபிறப்பு எப்படி இருக்கிறது, சொர்க்கம் மற்றும் நரகம் என்றால் என்ன, மூதாதையர் செயல்களை எவ்வாறு செய்வது போன்ற விவரங்களை இது வழங்குகிறது. இறக்கவிருக்கும் ஒருவர் என்ன பார்க்கிறார் என்பதும் இதில் அடங்கும். தனது வாழ்க்கை முடிவுக்கு வரும் ஒருவர் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இந்த அறிகுறிகளைப் பார்க்கிறார். ​​யமதூதர்: கருட புராணத்தின் […]

இந்தியாவின் மிக நீளமான சாலை பற்றி பேசும்போது, நேஷனல் ஹைவே 44 (NH 44) தான் முதன்மை. இதன் மொத்த நீளம் சுமார் 4,112 கிலோமீட்டர்கள். இது ஜம்மு காஷ்மீரிலுள்ள ஸ்ரீநகரில் தொடங்கி, தெற்கில் கன்னியாகுமரியில் முடிவடைகிறது, இந்தியாவின் வடக்கு முதல் தெற்கு வரையிலான முக்கிய சாலை மார்க்கமாகும். ஆனால், உலகிலேயே மிக நீளமான சாலை பற்றி பேசும்போது, அதன் அளவு வியக்க வைக்கும் வகையிலுள்ளது. உலகின் மிக நீளமான […]

நடைபயிற்சி என்பது யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு எளிதான பயிற்சி. வயதைப் பொருட்படுத்தாமல், அனைவரும் காலையிலும் மாலையிலும் நடப்பார்கள். மற்றவர்கள் முடிந்த போதெல்லாம் சிறிது நேரம் நடப்பார்கள். நடைபயிற்சி எடையைக் குறைப்பதில் உதவுவது மட்டுமல்லாமல், மன ரீதியாகவும் உற்சாகமடைகிறது. இருப்பினும், நீங்கள் எத்தனை அடிகள் நடப்பது நல்லது. எப்படி நடப்பது என்பது குறித்து பலருக்கு சந்தேகங்கள் உள்ளன. ஒரு நபர் ஒரு நாளைக்கு எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்பது […]

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், செல்போன் உரையாடல்கள் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் […]

நார்வே செஸ் 2025 போட்டியில் உலக சாம்பியன் டொம்மராஜு குகேஷ், ஜூன் 1 (ஞாயிற்றுக்கிழமை) அன்று உலக நம்பர் 1 வீரரான மக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்தார். இந்த ஆட்டத்தில் நார்வே வீரர் மக்னஸ் கார்ல்சன் ஒரு தவறு செய்ததினால், குகேஷ் பெரிய முன்னிலை பெற்றார், இது அவருடைய மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. தனது தோல்வியால் மிகவும் விரக்தியடைந்த கார்ல்சன் வெளிப்படையாகவே கையை மேசையில் தட்டி அதிருப்தியை […]

புகைப் பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கர்நாடகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் கர்நாடக அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் […]