’எனக்கு ஏன் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கவில்லை’ என பெற்ற தாயையே மகன் கொலை செய்த கொடூரம் மத்தியப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மத்தியப்பிரதேச மாநில தலைநகரான போபாலில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் பலத்த காயத்துடன் உயிரிழந்த நிலையில், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 67 வயதான அந்தப் பெண்மணி எப்படி உயிரிழந்தார் என போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. ஓய்வுபெற்ற ஆசிரியையை அவரது மகனே கொலை செய்தது தெரியவந்தவுடன் […]
டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 8-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில், முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2009-ம் ஆண்டு உலக […]
தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவம்பர் 9ஆம் தேதி தொடங்கி, டிச.8ஆம் தேதி வரை ஒரு மாத காலம் இப்பணி நடைபெறுகிறது. இக்காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான படிவங்களையும் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வழங்கலாம். இதற்கிடையில், பணிக்குச்செல்வோர் வசதிக்காக, […]
காதலை முறித்த கையோடு காதலனின் கைகால்களை முறிக்க கல்லூரி மாணவி ஆட்களை ஏவிய சம்பவம் கன்னியாகுமரியில் அரங்கேறியிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பியை அடுத்த மாத்தார் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். டிப்ளமோ முடித்து வெல்டராக பணியாற்றும் இவரும், அணைக்கரை பகுதியை சேர்ந்த ஜெஸ்லின் (19) என்ற கல்லூரி மாணவியும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்தனர். நேரில் சந்தித்த பின்னர் காதலர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி பழகிய நிலையில், ஜெஸ்லின் தனது வீட்டிற்கு […]
சென்னையில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக – கேரள […]
அரசு ஊழியர்கள் மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக நிதித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், ”நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்களை வாங்க விரும்பும் மத்திய அரசு ஊழியா்களுக்கு அவா்களது பணிநிலைக்கு ஏற்ப முன்பணம் வழங்கும் உத்தரவை மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது. இதேபோல், தமிழக அரசில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை முன்பணத் தொகை […]
தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாளையும் (14.11.2022) விண்ணப்ப செயல்முறை முடிவடைவதால், விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பணியின் முழு விவரங்கள்… பதவி மற்றும் கல்வித் தகுதி: விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள். விற்பனையாளர்கள் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர்கள் பதவிக்கு 10ம் வகுப்பத் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள்: 6503 மாவட்டம் […]
இன்று அனைத்து பொதுச் சேவை மையங்களும் செயல்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 2022-2023 ரபி பருவத்திற்கு பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் மூலம் நெல்-॥ பயிர்க் காப்பீடு செய்ய விரும்பும் அனைத்து விவசாயிகளும் (கடன் பெற்றோர் மற்றும் கடன் பெறாதோர்) பயிர்க் காப்பீடு செய்வதற்கான இறுதி நாளான 15.11.2022-க்குள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற ஏதுவாக இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு […]
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறைக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலமாக புதியதாக ஒப்பளிக்கப்பட்ட பகுதி சுகாதார செவிலியர்/நகர்ப்புற சுகாதார மேலாளர் & கணினி மேலாளர்/தரவு மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடம்:பகுதி சுகாதார செவிலியர் / நகர்ப்புற சுகாதார மேலாளர் – 2 (காலியிடம்)கணினி மேலாளர்/தரவு மேலாளர் – 1 (காலியிடம்) கல்வித்தகுதி: பகுதி […]
ஆன்லைன் மூலம் இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்… பான் கார்டு அனைத்திற்கும் முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது. காரணம் அதை பயன்படுத்தாமல் எந்த நிதி பரிவர்த்தனையும் நடக்காது. பான் கார்டு இல்லாமல், வங்கி கணக்கைத் தொடங்க முடியாது, நிதி முதலீடு செய்வதில் தொடங்கி தற்பொழுது அனைத்திற்கும் பான் அவசியம், ஒருவர் பான் கார்டை தொலைத்து விட்டால் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் தற்பொழுது, e-PAN […]