தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், […]
2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயிலும் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்கள், கீழ்காணும் அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள்,மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு வழங்கி செயல்படுத்துமாறு பள்ளிகல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். போட்டித் தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம்மற்றும் 12 […]
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தொடர் மழையால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு வழக்கம் போல வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், […]
வங்கக் கடலில் வரும் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக கடலோரப் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. வட தமிழகத்தில் பெய்யத் தொடங்கிய மழை தென் மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து அங்கு நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு […]
கர்நாடக மாநில அரசு மருத்துவமனையில் பிரசவ வலியில் அனுமதிக்கப்பட்ட தமிழ் பெண் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படாததால், வீட்டுக்கு சென்று இரட்டை குழந்தையை ஈன்றெடுத்த அவர், குழந்தைகளுடனே பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ்நாட்டை சேர்ந்த 30 வயது பெண் கஸ்தூரி. இவர் கர்நாடகா மாநிலம் துமகூருவில் உள்ள குடிசைப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த புதன்கிழமை இரவு பிரசவ வலியால் அவதிப்பட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மாவட்ட […]
கிராமப்புறங்களில் இருந்து இளம் பெண்களை வேலைக்கு வரவழைத்து அத்துமீறலில் ஈடுபட்டு வீடியோ எடுத்து மிரட்டி வந்த பள்ளிக்கரணை பர்னிச்சர் கடை அதிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குமரன் பர்னிச்சர் நிறுவனத்தின் உரிமையாளர் அருண்குமார். தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த இவர், தனது பர்னிச்சர் கடையில் விற்பனையாளர் வேலைக்கு என்று ஏழை குடும்பத்து இளம் பெண்களாக பார்த்து சேர்த்துள்ளார். அவர்களிடம் தனது பண செல்வாக்கை பயன்படுத்தி கடையில் […]
மூன்றாவது மனிதரின் அறிவுரை உங்கள் உறவில் நுழையுமானால், அந்த உறவு மெல்ல மெல்ல பிரிவை நோக்கி தான் செல்லும் என்று பிரபல நடிகை ராதிகா ஆப்தே கருத்து தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, தமிழில் கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்தில் நடித்து […]
ஹைதராபாத்தை சேர்ந்தவர் சீமா. 50 வயதான இவர் தொடர்ந்து பியூட்டி பார்லருக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஹேர்கட் மற்றும் முகத்தை அழகுபடுத்தி வந்துள்ளார். இந்நிலையில், இவர் வழக்கம்போல் ஹேர்கட் செய்தபோது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதும் அழகு நிலையம் செல்லும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண்ணுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் சுதிர் குமார் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் தற்போது இணையத்தில் வைரலாகி […]
ரேஷன் கடைகளில் கருவிழியை ஸ்கேன் செய்து பொருள் வாங்கி செல்லும் திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் கைரேகை […]
மத்திய பிரதேச மாநிலத்தில் பாலகாட் பகுதியில் உள்ள நகரில் ஜெயின் என்ற கோயில் உள்ளது. இக்கோவிலில் விலைமதிக்க முடியாத பல பொருட்கள் திருடு போய் விட்டன. இதனை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையிலும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் திருட்டு நடந்து 4 நாட்களுக்கு பின்னர் அந்த கோயிலுக்கு அருகில் ஒரு குழியில் ஒரு பை இருப்பதனை மக்கள் கண்டனர். அந்த பையில் கோயிலில் […]