US President Donald Trump has announced that he will decide within the next two weeks whether the United States will launch a direct military attack on Iran.
சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது இன்று காலை சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது. 62 பயணிகளுடன் சென்ற இந்த விமானம் நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்ததால் விமானம் பாதுகாப்பாக தரையிரங்கியது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. முன்னதாக […]
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் மீது மர்ம நபர்கள் லேசர் ஒளி அடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று 4வது முறையாக, இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் 288 வகை விமானம் தரையிறங்கும் தருவாயில் அதன் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. விமானி சிறிது நேரத்துக்கு பார்வை தடுமாறிய போதும், சூழ்நிலையை சரியாக மதிப்பீடு செய்து விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடிந்தது. பின்னர், இந்த […]
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான தொலைத் தொடர்பு சேவைகளின் செயல்திறன் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான தொலைத் தொடர்பு சேவைகளின் செயல்திறன் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரையிலான காலத்தில் தொலைத்தொடர்பு, கேபிள் […]
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து […]
தனுஷ் – சேகர் கம்முலா கூட்டணியில் உருவான படம் குபேரா.. ‘ஃபிடா’ படத்தின் மூலம் தனக்கென தனிப்பெயரை சம்பாதித்த சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் […]
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் காரணமாக, கடந்த ஒரு வாரமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வரும் நாட்களில் அதன் விலை மேலும் உயரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஒரு வாரமாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவுவதாகவும், ஆனால் எண்ணெய் பற்றாக்குறை இல்லை […]
தினமும் கருப்பு திராட்சையை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அத்தகைய கருப்பு திராட்சையை பாலில் 30 நாட்கள் ஊறவைத்து சாப்பிடுவது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். கருப்பு திராட்சை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பாலில் இரவு முழுவதும் ஊறவைத்து சாப்பிட்டால், பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 30 நாட்கள் இவற்றை உட்கொள்வது உடலுக்குத் தேவையான […]
பல்வேறு வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை 10% இலிருந்து 15% ஆக உயர்த்தப்படுவதாக கர்நாடக அமைச்சரவையில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, எதிர்க்கட்சியான பாஜக இந்த நடவடிக்கையை “அரசியலமைப்புக்கு விரோதமானது” என்று குற்றம்சாட்டியுள்ளது. அமைச்சர்களின் படி, இந்த நடவடிக்கை மக்கள் தொகை நிலவரங்களுக்கும், மற்றும் தற்போதுள்ள மத்திய வழிகாட்டுதல்கள் இரண்டிற்கும் ஒத்துப்போகிறது. இந்த உயர்த்தப்பட்ட ஒதுக்கீடு அனைத்து சிறுபான்மையினருக்கும், அதாவது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஜெயின்கள் ஆகியோருக்கும் பயனளிக்கும் என்று […]
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், இன்று முதல் 5 விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் ஆகிய 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்த 18-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இருமார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது. எனவே, வெளிமாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வரும் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளுக்கு இணைப்பு ரயில்களை […]

