பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் குவின்ஸியிடம் சக போட்டியாளரான அசல் கோளார் அத்துமீறி நடந்துகொண்ட விதம் பார்ப்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் ஆரம்பத்திலேயே 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், நேற்று புதுவரவாக மைனா நந்தினியும் எண்ட்ரி கொடுத்தார். தற்போது மொத்தம் 21 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். முதல் வார இறுதியில் […]

அக்.18ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் மேலடுக்கு சுழற்சியானது, இரண்டு தினங்களுக்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், […]

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, இறங்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக மற்றும் ஒரு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கடந்த […]

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் […]

உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக வீரர் குகேஷ். செஸ் சாம்பியன்ஷிப் தொடர்களில் ஒன்றான AIM செஸ் ரேபிட் தொடர் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 8-வது சுற்று போட்டிகளில் தமிழக வீரர் குகேஷ் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய தமிழக வீரர் குகேஷ் தன்னுடைய 29-வது நகர்த்தலில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார். ஏற்கனவே […]

சிறுமியை கடத்தி போதை பொருள் கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் கிராமத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். பல இடங்களில் தேடிய சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், இறுதியில் […]

அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில அரசு ராயலசீமா, கடலோர ஆந்திரா, வட ஆந்திரா ஆகிய 3 பகுதிகளிலும் சம வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக 3 தலைநகர் என்ற கொள்கையுடன் விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், கர்னூலை நீதிமன்ற தலைநகராகவும், அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும் அறிவித்தது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சி […]

விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களினால்‌ ஏற்படும்‌ மகசூல்‌ இழப்புகளை பாதுகாக்க திருந்திய பிரதம மந்திரி பயிர்‌ காப்பீட்டு திட்டம்‌ 2016-ம்‌ ஆண்டு முதல்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ சிறப்பு மற்றும்‌ ரபி பருவத்தில்‌ பயிர்‌ காப்பீடு திட்டத்தை செயல்படுத்திட தருமபுரி மாவட்டத்தில்‌ பஜாஜ்‌ அலையன்ஸ்‌ ஜெனால்‌ இன்சூரன்ஸ்‌ கம்பெனி லிமிடெட்‌ நிறுவனம்‌ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ நெல்‌பயிர்‌ காப்பீட்டு செய்ய கடைசி நாள்‌ 15.11.2022 ஆகும்‌. எனவே இத்திட்டத்தின்‌ […]

’பிஎம் கிஷான்’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 12-வது தவணைத் தொகை இன்று வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், மிக முக்கியமான திட்டம் தான் ’பி எம் கிசான்’ (PM Kisan) திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை 3 தவணைகளாக 2,000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக […]

காதல் விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, குடும்ப தலைவனை குடும்பமே அடித்துக் கொன்று தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையை அடுத்த அச்சங்குளம் கிராமத்திற்கு மேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் இருக்கும் விவசாய நிலத்தில் ஆண் உடல் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பசுவந்தனை போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், தீ வைத்து எரிக்கப்பட்டவர் குருவிநத்தம் […]