டெங்குவுக்கு கடந்த சில ஆண்டுகளாக டெங்கு பாதிப்புகள் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் இறப்புகள் , பாதிப்புகள் குறித்த அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம் , மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்புகள் திடீரென அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் , உத்தரபிரதேசம் , பஞ்சாப்  மற்றும் ராஜஸ்தான் […]

புதுச்சேரியில் தாய் கண்டித்ததால் 12 வயது பள்ளி மாணவி நெயில் பாலிஷ் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் அபிஷேகபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழி (32). இவரது கணவர் பிரணவ். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூவரும் அபிஷேகப்பாக்கம் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கனிமொழியின் […]

சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்க டாலரின் மதிப்புதான் உயர்ந்துள்ளது … என்ற தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் . முன்னதாக செய்தியாளர்களைச்சந்தித்தபோது இந்திய ரூபாய் மதிப்பு சரிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க டாலரின்மதிப்பு சர்வதேச சந்தையில் வலுவாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளது. அனைத்து நாடுகளின் நாணயங்களும் அதற்கு […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் சென்ற வருடம் இரண்டு நாட்களில் 431 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் நாள் 200 கோடியும், தீபாவளி அன்று 200 கோடியும் ஆக மொத்தம் 400 கோடிக்கு மது விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் கடைகளில் தேவையான அளவு […]

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் சின்ஹா, மாரடைப்பால் காலமானார். சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்எல்ஏ மனோஜ் சின்ஹா மந்தவி செயல்பட்டு வருகிறார். மனோஜ் கன்கீர் மாவட்டம் பானுபிரதாபூர் தொகுதி எம்எல்ஏ ஆவார். இந்நிலையில், 58 வயதான மனோஜ் சின்ஹாவுக்கு நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தம்தரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு […]

பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரம் படத்தின் வசூலை முறியடித்து சாதனைபடைத்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூலை குவித்த படங்களில் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தையும் மிஞ்சி பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலை ஈட்டியுள்ளது. .படம் வெளியான இரண்டு வாரங்களில் உலக அளவில் 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று தற்போது 500 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த சாதனை நிகழ்த்தப்பட்டுவிடும் என்றே பாக்ஸ் ஆபீஸ் […]

உக்ரைன் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில் ரஷ்ய நாட்டிடம் ஆயுதங்கள் பற்றாக்குறைாயாக உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் நாட்டின் மீது கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்து வருகின்றது ரஷ்யா. இதில் பல நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். பலர் மரணம் அடைந்தனர். ஆனாலும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. எனவே உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளிடம் சரணடைய மறுத்து துணிச்சலோடு இன்னும் களத்தில் போரிட தயாராக […]

மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படுவதால், காவிரி கரையோரத்தில் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடி உள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் திறந்து […]

கேரளா நரபலி விவகாரத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது ஷாஃபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, முகமது ஷாஃபி-யை அழைத்துச் சென்று கொச்சியில் உள்ள அவரது வீடு, ஹோட்டல் […]

வீட்டின் கதவை திறக்காமல் 3 நாட்களாக கதவை திறக்காமல் பூஜை செய்ததால் வீட்டில் நரபலியா ? என்று சந்தேகம் எழுத்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.விநகரம் என்ற பகுதியில் தவணி – காமாட்சி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூபாலன் , பாலாஜி என்ற மகன்களும் கோமதி என்ற மகளும் இருக்கின்றர்கள். ராமநாதபுரத்தைச் சேர்ந்த காளிப்பிரியா என்பவரைத்தான் பூபாலன் என்பவர் திருமணம் செய்துள்ளார். இருவரும் சென்னையில் காவலராக […]