கிராம உதவியாளர் எனப்படும் பணிக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள். காலியிடங்கள்: தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் இடங்கள் காலியாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10-ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.அடிப்படைத் தகுதிகள்: 21 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும். 01-07-2022 தேதிக்கு முன்பாக 5ம் வகுப்புத் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்டத் […]

பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.. லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. கல்கி நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து வசூலில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 13 நாட்கள் […]

செவிலியர் ஒருவர் இளவரசர் ஹேரியிடம் , ’’ டயானா உயிரோடு இருந்திருந்தால் பெருமைப்பட்டிருப்பார்’’ என கூறிய நொடியில் கலங்கிப்போனார் ஹேரி.. லண்டனில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. ஹேரியின் தாய் டயானாவைப் போலவே  தொண்டுள்ளம் கொண்டவர் ஹேரி. அவர் அடிக்கடி தொண்டு நிறுவனங்களுக்கு சென்று வருவார். அவர்களுக்கான உதவிகளையும் ஹேரி செய்வது வழக்கம். மேலும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஹேரி மனைவி மேகனுடன் கலந்து கொள்வார். இதுபோன்ற ஒரு […]

தீபாவளி சலுகையாக ஒரு டிக்கெட்டை வைத்து 5 முறை இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டதால்மக்கள் குஷியாக உள்ளனர். தீபாவளியை ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை வழங்கி வருகின்றன. ஆன்லைன் இ.காமர்ஸ் நிறுவனங்கள் கூட இது மாதிரியான சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் மும்பை மாநகரத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒரு டிக்கெட்டை வைத்து 5 முறை பயணம் செய்யலாம் என்ற அந்த […]

நயன்தாரா –விக்னேஷ் சிவன் தம்பதியினரின் இரட்டை குழந்தைகளுக்கு வாடகைத்தாய் யார் என்பதற்கு பதில் இப்போது கசிந்து வருகின்றது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் பல ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இருவரும் தாய்லாந்து என நாடு நாடாக ஹனிமூன் சென்றனர். விரைவில் குழந்தை பிறக்கப்போவதாக சஸ்பென்ஸ் எல்லாம் வைத்திருந்தார் நயன்தாரா . இரு தினங்களுக்கு முன்பு நாங்கள் […]

தமிழ் எழுத்து பயிற்சி கொடுப்பதாக சொல்லி ஐந்தாம் வகுப்பு மாணவியை தன் அறைக்குள் அழைத்து கதவை சாத்திக்கொண்டு பாலியல் சில்மிஷம் செய்த தனியார் பள்ளியின் தாளாளருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் ராயக்கோட்டை சாலையில் இயங்கி வருகிறது சாந்தி நிகேதன் மெட்ரிக் தனியார் பள்ளி.   இந்த பள்ளியின் தாளாளராக இருந்தவர் குருதத்(64). கடந்த 2019 ஆம் ஆண்டில் […]

வேலூர் அருகே கருணை இல்லத்தில் முதியோர்களை கருணையின்றி அடித்து துன்புறுத்தியதாக எழுந்த புகாரால் இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில்கருணை இல்லம் செயல்பட்டு வருகின்றது.இதில் முதியோர்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் , முறையாக உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில் அந்த கருணை இல்லத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து அதிகாரிகள் கருணை இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் , முதியவர்களுக்கு சரியாக […]

தற்போதைய தமிழ் சினிமாக்களால்தான் தமிழ் கலாச்சாரம் சீர்கெடுகின்றது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி காட்டமாக பதிவிட்டுள்ளர். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில், தமிழ் இளைஞர்ளின் கலாச்சாரம் சீர்கெட்டுள்ளது. தமிழ் சினிமாவால்தான் இது போன்றுநடக்கின்றது. கடந்த இரண்டு தினத்திற்கு முன்பு பேருந்து நிலையத்தில் பள்ளி சீருடையில் மாணவர் ஒருவர்மாணவிக்கு தாலிகட்டுகின்றார். . ஒருபக்கம் லேடி சூப்பர் ஸ்டார் என […]

துபாயில் பறக்கும் வகை காரை சோதனை செய்து சீன நிறுவனம் அசத்தி உள்ளது. துபாயில் சீனாவின் புதிய அதிநவீன பறக்கும் கார் வெற்றிகரமாக சோதனையை நிறைவு செய்துள்ளது. இந்த வகை காருக்கு எக்ஸ் – 2 என பெயரிட்டுள்ளது. 2 பேர் பயணம் மேற்கொள்ளும் வகையில் 2 இருக்கைகள் பொருத்தப்பட்டு கச்சிதமாக இந்த காரை வடிவமைத்துள்ளனர். செங்குத்தாக புறப்பட்டு அதே நிலையில் தரையிறங்கும் வண்ணம் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. எக்ஸ் […]

டி.20 உலக கோப்பை போட்டி இனி திரையரங்குகளில் நேரலையில் காணலாம் என கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனிப்பான தகவலை வெளியிட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கான டி.20 உலக கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தையும் ஐநாக்ஸ் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் ஐநாக்ஸ் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. வரும் அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டிகளை ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் […]