குடிபோதையில் 16 வயது சிறுமியை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை திருவிக நகர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது பெண் ஒருவர், கணவரைப் பிரிந்து தனது மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். நேற்று காலை தனது 16 வயது மகளுடன் கடைக்குச் செல்வதற்காக புறப்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது, இவரது மகள் கீழே நின்று கொண்டிருந்தபோது […]

வீட்டிற்கு கோபி மஞ்சூரியன் வாங்கி வந்தது பிடிக்காமல், திட்டிய பாட்டியை மகள், பேரன் உள்பட 3 பேர் கொலை செய்த சம்பவத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள கேங்கிரி சாட்டிலைட் டவுனில் வசித்து வந்தவர் சசிலேகா (50). இவருக்கு சஞ்சய் வாசுதேவ் ராவ் என்ற 27 வயது மகன் உள்ளார். சசிலேகாவின் கணவர் உயிருடன் இல்லாத நிலையில், சசிலேகாவின் தாயான 70 […]

அம்பத்தூரில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை தொடர்பாக, அவரை காதல் வலையில் வீழ்த்திய டியூஷன் டீச்சரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வரும் ஷர்மிளா, பள்ளி முடிந்து மாலை நேரத்தில் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். இவரிடம் அதேப்பகுதியை சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர். அதேசமயம், கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் […]

ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆடைகளை கழைந்து அரை நிர்வாண வீடியோ வெளியிட்டுள்ளார். ஈரானில் 9 வயது சிறுமி முதல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கபட்டுள்ளது. கடந்த செப்.13ஆம் தேதி குர்திஸ்தான் மாகாணத்தில் மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று கைது செய்யப்பட்டார். மேலும், போலீசார் அவரை கடுமைமாக தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற அவர் […]

க்யூட் (பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு) தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கைகள் நடைபெறும். தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் சேர்க்கைக்காக க்யூட் (பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு) தேர்வு எழுதிய மாணவர்கள் எங்களுடைய வலைதளமான (www.rgniyd.gov.in) –ல் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த மாணவர்கள் க்யூட் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், மத்திய அரசின் இது இடஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வரும் […]

தூங்கிக் கொண்டிருந்த தாயின் தலையில் மகன் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன், சரியாக படிக்காததால் விடுதியில் சேர்க்க அவனது பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். இதை தெரிந்து கொண்ட அந்த மாணவன், தான் விடுதிக்கு செல்ல விருப்பமில்லை என்று தாய் யுவராணியிடம் கூறியிருக்கிறான். ஆனால், தாய் யுவராணியோ நீ விடுதியில் தங்கியிருந்தால்தான் சரியாக […]

பண்டிகை காலம் நெருங்கி வரும் சமயத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்குவது வழக்கம். வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக ஆன்லைன் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அள்ளிக் கொடுக்கும். இதனால், ஷாப்பிங் செய்பவர்கள் கண்மூடித்தனமாக இதில் இறங்கி விடக்கூடாது. இதிலும் ஏராளமான ஆபத்துக்கள் உள்ளது. நிறைய பேர் தங்களுடைய பணத்தை இழந்துள்ளார்கள். ஏனெனில், இன்றைய காலக்கட்டத்தில் பலவிதமான வழிகளில் மோசடிகள் அரங்கேறி வருகிறது. நீங்கள் எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் […]

சர்ச்சையில் சிக்கிய மெய்டன் நிறுவனத்தின் இருமல் மருந்துகள் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மெய்டன் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்து ஏற்றுமதி செய்த இருமல் மருந்துகளை உட்கொண்டதால் காம்பியா நாட்டில் குழந்தைகள் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதையடுத்து, சோனிபட் நகரில் மெய்டன் பார்மாவுக்கு சொந்தமான ஆலையில் ஆய்வு நடத்திய பின் இருமல் மருந்துகள் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட […]

தமிழகத்தில்‌ வணப்பரப்பை அதிகப்படுத்தி, பசுமைப்‌ போர்வையை விரிவுபடுத்தும்‌ வகையில்‌ பசுமை தமிழ்நாடு இயக்கம்‌ முதலமைச்சர்‌ அவர்களால்‌ கடந்த 24.09.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழக வணம்‌ மற்றும்‌ பசுமைப்‌ பரப்பினை 33சதவீதமாக உயர்த்துததனை முக்கிய நோக்கமாகக்‌ கொண்டு இவ்வியக்கம்‌ தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்‌ பல்வேறு இடங்களில்‌ மரம்‌ வளர்ப்பிற்கு, ஊக்குவித்தல்‌ இவ்வியக்கத்தின்‌ நோக்கமாகும்‌. அதனடிப்படையில்‌, வேளாண்‌ பெருமக்கள்‌, தொழில்‌ நிறுவனங்கள்‌. மக்கள்‌ நலச்‌சங்கங்கள்‌, இயற்கை ஆர்வலர்கள்‌ மற்றும்‌ தணி நபர்கள்‌ […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய போக்குவரத்து இணைப்பில் முன்னணி துறையாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. இதில், 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் ரயில்வே துறையை நாள்தோறும் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பின்னர் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து […]