மின் கட்டண சலுகை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மின் நுகர்வோருக்கு முதல் 100 யூனிட்கள் இலவசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. சலுகைகளை பெற விரும்பும் தகுதியான நபர் ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, அரசின் பல்வேறு திட்டங்களின் சலுகைகளைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆதார் எண் இல்லாதவர்கள் தங்களுக்கான […]
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியக்கூடாது என்ற கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறது. கர்நாடக நீதிமன்ற தீர்ப்பு… ஹிஜாப் அணிந்து வருவது என்பது இஸ்லாமிய மதத்தில் அடிப்படையான விஷயம் அல்ல என்றும் சீருடை விவகாரத்தில் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் கிடையாது எனவும் சீருடை விவகாரங்களில் உரிய அறிவுறுத்தல்களை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் […]
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனரா என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். கேரள மாநிலத்தில் தருமபுரியை சேர்ந்தவர் உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரியைச் சேர்ந்த பத்மா உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட எலந்தூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 3 பெண்கள் காணாமல் போயுள்ளனர். 5 ஆண்டுகளில் கொச்சி […]
கடந்த சில நாட்களாக வீட்டை குதூகலத்தில் வைத்திருந்த ஜிபி முத்து, திடீரென கதறி அழுதது, பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் அனைவரையம் கவலை கொள்ளச் செய்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி, தொடக்கத்திலேயே பரபரப்பை எட்டியுள்ளது. அதற்கு காரணம், இந்த முறை சரியான போட்டியாளர்களை உள்ளே அனுப்பியது தான். ஜி.பி.முத்து போன்ற எளிய சாமானியர்களை உள்ளே அனுப்பியதால், அவர்களின் வெகுளித்தனம் வெகுஜனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே […]
தமிழகம் முழுவதும் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. ஆவின் பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 26ஆம் தேதிக்குள் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகம் முழுவதும் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட […]
வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருச்சியைச் சேர்ந்த கேர் கன்சல்டன்சி (Care Consultancy) என்ற நிறுவனம் தாய்லாந்து நாட்டில் நல்ல சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்கள் தேவைப்படுதாக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி வேலைக்கேட்ட 18 பேரிடம் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை வசூலித்துள்ளனர். பின்னர் அந்த 18 பேரையும் சுற்றுலா […]
திருமணமான இளம்பெண்ணை கடத்தி, அறையில் அடைத்து வைத்து நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்து வந்த காமக்கொடூரனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் பல இடங்களில் பெண்கள் துன்புறுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பெண்கள் தனியாக அகப்படும் நேரங்களில் அவர்கள் பாலியல் […]
மத்தியப்பிரதேசத்தில் கை பம்பு வைத்து கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 7 அடி ஆழத்தில் பேரல்கள் அமைத்து அதில் கள்ளச்சாராயம் நிரப்பி அதன் மேல் கைப்பம்பு வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்டம் சஞ்சோடா, ரகோகர் ஆகிய இரண்டு கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அக்கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,786 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,884 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
15 வயது பள்ளி மாணவி தகாத உறவின் மூலம் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூரில் உள்ள ராமகிருஷ்ணா நகர், காந்தி தெருவைச் சேர்ந்த 15 வயது சிறுமி வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவ பரிசோதனைக்காக அவரது தாயார், சிறுமியை அழைத்துக் கொண்டு ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். […]