திமுக எம்பி கனிமொழியை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியினரிடையே வலுப்பெற்று வருகிறது. திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, அந்த பதவியை திமுக மகளிரணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியில் எழுந்துள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர். […]
உக்ரைன் உடனான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.. உக்ரைனில் கடுமையான போர் நடந்து வரும் நிலையில் அணு ஆயுத தாக்குதல் குறித்து ரஷ்யா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனிடையே, அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.. உக்ரைனில் ரஷ்ய ராணுவம் அணு ஆயுதங்க்ளை பயன்படுத்தினால், அது மிக கடுமையான விளைவுகளை […]
முழு அடைப்பிற்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருவனந்தபுரம், கேரளா உட்பட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய மத அமைப்பு தொடர்புடைய 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, கேரளாவில் அதிகபட்சமாக 22 பேர் […]
சினிமா தியேட்டரில் போலீஸ் உடை அணிந்து நிர்வாகிகளை மிரட்டிய கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் அடுத்த மணவாள நகரில் திரையரங்கு ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை 11 மணியளவில் போலீஸ் உடை அணிந்த நபர் ஒருவர் உள்ளே சென்று அங்கிருந்த நிர்வாகிகளிடம் பள்ளி நேரத்தில் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் சினிமா பார்க்க வருவதாக எங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வருவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை […]
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 1 அக். 14 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளை (TET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. மத்திய அரசின் சட்டப்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை intha தேர்வை மாநில அரசுகள் நடத்த வேண்டும். மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி […]
அசாமில் 11 வயது சிறுமியை அவரது மாமா முறை உறவினரே பாலியல் வன்புனர்வு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம், துப்ரி மாவட்டத்தில் 11 வயது சிறுமியை அதுல் பிஸ்வாஸ் (31) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிக்கு பிஸ்வாஸ் மாம முறை. இந்த சம்பவம் தொடர்பாக தாம்ராத் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனது உறவினர் அதுல் பிஸ்வாஸ் […]
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகிறார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கை ஓங்கியது. பொதுக்குழு உறுப்பினர்களில் 95% பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அன்றைய கூட்டத்திலேயே அடுத்த 3 […]
‘வாய்தா’ திரைப்பட நடிகை பவுலின் என்கிற தீபாவின் காணாமல்போன ஐபோன் மீட்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று ‘வாய்தா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பவுலின் ஜெசிகா என்கிற தீபா, விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தீபா தற்கொலை செய்துகொண்டபோது முதல் ஆளாக வந்து கதவை உடைத்துப் பார்த்த பிரபாகரன் என்பவரிடம் இருந்து தற்போது […]
80 மற்றும் 90 களில் தாங்கள் தயாரிக்கும் அனைத்து படங்களிலும் எப்படியாவது சில்க் ஸ்மிதாவை புக் செய்து விட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்களும் ஆசைப்பட்ட ஒரே நடிகை சில்க் ஸ்மிதா தான்.. ஏனெனில் சில்க் ஸ்மிதாவின் பாடல் இருந்தால் படம் ஹிட்டாகி விடும் என்பதே அப்போது தயாரிப்பாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.. சில்க் ஸ்மிதா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, அவரின் சொக்க வைக்கும் பார்வை, அவரது […]
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தினமும் பல விதமான டிஃபன் வகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி திங்கட்கிழமை உப்புமா வகை, செவ்வாய்க்கிழமை கிச்சடி, புதன் கிழமை பொங்கல், வியாழக்கிழமை உப்புமா வகை, வெள்ளிக்கிழமை […]