மின்வாரிய ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.. ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது, மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3 சதவிகிதமாக உயர்ந்து 34 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.. […]
கோவையில் பாஜகவினரின்வீடுகளில் நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் ரயில்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் கடந்த மூன்று நாட்களாக பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் 9 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. கோவை வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அங்கிருக்கும் காவல்துறையினர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் […]
அமெரிக்கா மற்றும் கனடாவில் பிரிவினை வாத வன்முறை செயல்கள் மற்றும் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கை அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கனடாவில் வசிக்கும்இந்திய குடிமக்கள், குறிப்பாக மாணவர்கள் எச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிராம்ப்டன் என்ற நகரில் சீக்கிய பிரிவினைவாத அமைப்பு காலிஸ்தான் அமைப்பு தனி காலிஸ்தான் நாடு என்ற தீர்மானத்தை கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பு உள்நோக்கத்துடன் […]
கரூரில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவிக்கு சாதிரீதியான பாகுபாடு காட்டப்படுவதாக ஊராட்சிமன்றத் தலைவி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நன்னியூர் ஊராட்சியின் தலைர் , துணைத்தலைவர் உள்பட பத்த பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதிமுகவை சேர்ந்த 5 பேரரும் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 5 பேர் என 10 பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில் ஊராட்சி தலைவராக சுதா என்பவர் இருக்கின்றார். […]
நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. 2025-26 நிதியாண்டில் எலக்ட்ரிக் வாகன பிரிவில் இரு சக்கர வாகனங்களின் பங்கு 15 சதவீதமாக இருக்கும். இருப்பினும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மின்சார ஸ்கூட்டர்களில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளின் தரம் குறித்த புதிய விதியை […]
உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் போது, இரண்டு எம்.எல்.ஏக்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சபை நடவடிக்கையின்போது, பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ராகேஷ் கோஸ்வாமி செல்போனில் ஆன்லைன் ரம்மி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். மற்றொரு எம்.எல்.ஏ., தனது கையில் புகையிலையை கொட்டி வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தார். இந்த இரண்டு வீடியோவையும் சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ […]
டிக்டாக் ஆப் மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவை பைக்கில் அமர வைத்து பைக்கை வேகமாக ஓட்டி, டிடிஎப் வாசன் அதை யூ டியூப்பில் வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து கோவை மாநகரக் காவல், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செப்டம்பர் 14-ஆம் தேதி டிடிப் வாசன் என்ற நபர் அவரது பைக்கில் யூடியூபர் ஜி.பி.முத்துவை பின் சீட்டில் உக்கார வைத்து கோவை மாநகரம், டி3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாலக்காடு மெயின் […]
ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இந்த வாரம் சீனாவில் இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு மரண தண்டனையும் நான்கு உயர் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது… சீன அதிபரின் சர்வாதிகார போக்கை இது காட்டுகிறது அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.. லஞ்சம், பங்குச் சந்தை கையாளுதல் மற்றும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததற்காக […]
உத்தரபிரதேச சட்டசபையில், குற்றவியல் நடைமுறை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. சிறார் பாலியல் வழக்குகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோருக்கு முன்ஜாமீன் வழங்கப்படகூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. மசோதா பற்றி பேசிய உத்தரபிரதேச சட்டசபை விவகார அமைச்சர் சுரேஷ்குமார் கன்னா, இதன்மூலம், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஆதாரங்களை அழிப்பதற்கான வாய்ப்பு குறையும். பாதிக்கப்பட்ட பெண்ணையும், சாட்சிகளையும் அச்சுறுத்தும் வாய்ப்பு குறையும் என்று கூறினார். மேலும் இந்த […]
தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, […]