கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானியும், மருத்துவருமான எட்டியென்- எமிலி பவுலியூ, 98, வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம்காலமானார். கடந்த, 1926ல் பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் எட்டியென் ப்ளூமில் பிறந்த பவுலியூ, நாளமில்லா சுரப்பியியல் நிபுணர் ஆவார். ஸ்டீராய்டு ஹார்மோன்களில் அவரது ஆராய்ச்சிகள், மருத்துவத் துறையில் முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தன. கடந்த 1963ல் தனியாக ஹார்மோன் ஆராய்ச்சி பிரிவை அவர் நிறுவினார். அதன் தலைவராக, 1997 வரை இருந்தார். கருக்கலைப்புக்கான, […]

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களை உள்ளடக்கிய யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) சேவையில் இந்தியா ஒரு மகத்தான சாதனையை செய்து உள்ளது. இந்தியாவில் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் பரிவர்த்தனைகள் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. இந்தநிலையில், நாட்டில் மே மாதம் 1868 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. […]

இந்திய ரயில்களின் நேரடி இயக்க நிலையை அறிய தனியார் பயன்பாடுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய ரயில்வே மக்களை எச்சரித்துள்ளது. ரயில் சேவைகள் தொடர்பான சரியான நேரங்கள் மற்றும் பிற தகவல்களை அறிய தேசிய ரயில் விசாரணை அமைப்பு (NTES) பயன்பாட்டைப் பயன்படுத்த ரயில்வே பரிந்துரைத்தது. நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயில் நேரங்களைப் பற்றி அறிய ரயில் யாத்ரி, இக்ஸிகோ ரயில் மற்றும் ‘வேர் இஸ் மை டிரெய்ன்’ போன்ற […]

இந்தியன் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது தொடர்பான கட்டணங்களை அண்மையில் ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்தது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம் என்றும், தங்கள் வங்கிக் கணக்கு அல்லாத பிற வங்கி ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக முறை பணம் […]

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராஜலட்சுமி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஞானசேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆன்லைன் வாயிலாக முதல்கட்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஞானசேகரனுக்கு மட்டுமே தொடர்பு உள்ளது […]

நைஜீரியாவில் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று கோர விபத்திற்குள்ளானதில், 21 இளம் விளையாட்டு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய விளையாட்டுப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, பேருந்தில் இளம் வீரர்கள் 21 பேரும் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், கோர விபத்தில் 21 வீரர்களும் பரிதாபமாக பலியானார்கள். விபத்துக் குறித்த முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் அதிகக் களைப்புடன் இருந்திருக்கலாம் அல்லது […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : Bharat Electronics Ltd (BEL) வகை : மத்திய அரசு மொத்த பணியிடங்கள் : 20 பணியின் பெயர் : இன்ஜினியர் (தரக்கட்டுப்பாடு), சூப்பர்வைசர் (தரக்கட்டுப்பாடு) கல்வித் தகுதி : * இன்ஜினியர் […]

ஜூன் 2 ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் – டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சர்வதேச பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி தங்கத்தின் முதலீடு செய்வது அதிகரிப்பதால், ஆபரணத் தங்கம் விலையிலும் சற்றே உயர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், […]

கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பயங்கர காட்டுத்தீ தொடர்ந்து பரவி, காற்றின் தரத்தைப் பாதித்தது, இதனால் மனிடோபா, ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் ஆகிய மூன்று மாகாணங்களில் 25,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கனடாவின் மனிடோபா (Manitoba) மாநிலத்திலிருந்து சுமார் 17,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மாநிலத்தில் 12 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீயை அடுத்து மனிடோபாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தீயால் […]

எதிரிகளின் ஆளில்லா விமானங்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த லேசர் ஆயுதத்தைப் பயன்படுத்திய முதல் நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது, இது நவீன போரில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. காசாவில் நடந்து வரும் போரின் போது இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. இஸ்ரேலிய விமானப்படையின் வான்வழி பாதுகாப்பு அணி நேரடி போர்க்கள நிலைமைகளில் ஒரு முன்மாதிரி லேசர் வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தியது. இஸ்ரேலை தளமாகக் கொண்ட ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் […]